tamilnadu

img

5 மணி நேரம் தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் - உறவினர்கள் ஆவேசம்

நிறைமாத கர்ப்பிணி தவிப்பு

ஏற்காடு, நவ.27- ஏற்காட்டில் பிரசவத் திற்கு ஆம்புலன்ஸ் அழைக் கப்பட்ட நிலையில், பல மணி நேரம் தாமதமாக வந்த தால் உறவினர் ஆவேசம டைந்தனர்.  சேலம் மாவட்டம், ஏற் காடு, அரண்மனைக்காடு கிராமத்தை சேர்ந்த  அல்லிமுத்து என்பவரின் மனைவி பூமணி  (24).  நிறைமாத கர்ப்பிணியான இவர் வாழவந்தி  அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் தொடர் பரிசோதனை  மற்றும் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து செவ் வாயன்று காலை பிரசவத்திற்காக மருத்துவமனைணில் அனுமதிக்கப்பட்டார். பூமணிக்கு ஆர்.ஹெச். என்ற அரிய வகை ரத்தம் என்பதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு  செல்ல மருத்துவர்கள் பரிந்துரை  செய்தனர்.  இதையடுத்து மதியம் 1:30 மணியளவில்  108 ஆம்பு லன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் 108 ஆம்பு லன்ஸ் வரும் என்று எதிர்பார்த்து பூமணியும் அவரது கணவரும் காத்திருந்தனர். ஆனால் மாலை 5 மணி யாகியும் ஆம்புலன்ஸ் வராததால், பூமணியின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5.20க்கு  வந்த ஆம்புலன்ஸ் மூலம் பூமணி சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தரப்பில் கூறு கையில், ஏற்காட்டை சேர்ந்த இரண்டு 108 ஆம்புலன்சும் வேறு நோயாளிகளுடன் சேலம் சென்றிருந்ததால், வர  தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதேநேரம், ஏதேனும்  விபரீதம் ஏற்படுவதற்கு முன்னர் அதிகாரிகள் வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கென தனி 108 ஆம்புலன்சை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.