சேலம், மே 7-சேலம் மாநகராட்சியில் கடந்த 4 மாதங்களில் 10.51 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ஜன.1 ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்தது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களின்பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 5 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக்குழுக்கள் மூலம் மாநகராட்சியில் உள்ள அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள இனிப்பகங்கள், உணவகங்கள், பேக்கரிகள், தேநீர் விடுதிகள், துணிக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டன.இதில் சூரமங்கலம் மண்டலத்தில் 565 கடைகளில் 3,104 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் 452 கடைகளில் 927 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், அம்மாபேட்டை மண்டலத்தில் 706 கடைகளில் 4,188 கிலோ பிளாஸ்டிக் பொருட்களும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 699 கடைகளில் 2,298 கிலோ பிளாஸ்டிக் பொருட்களுமாக மொத்தம் 2,422 கடைகளில் 10,517 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன. இத்துடன் கடை உரிமையாளர்களிடம் ரூ. 5.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்புக்குழுவினர் மூலம்தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.