tamilnadu

img

உத்திரபிரதேசத்தில் இருந்து இரு கம்பெனி துணை ராணுவ படையினர் கோவை வருகை

கோவை,

உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் இருந்து கோவைக்கு இரு கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர்.

கோவையில் 113 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமான கருதப்படுகிறது. இதனால் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து இரு துணை ராணுவ படையினர் இன்று ரயில் மூலம் கோவைக்குவந்துள்ளனர். இதில் ஒரு கம்பெனி படையினர் கோவையிலும் மற்றொரு கம்பெனி படையினர் மதுரையிலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பி.ஆர் நடராஜன் கோவையிலும் சு.வெங்கடேசன் மதுரையிலும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;