செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஜூன் 8- மனிதகுலம் மீண்டும் வரலாற்றின் குறுக்குச் சாலையில் நிற்கிறது என்று சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் குறிப்பிட்டார். 23ஆவது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் சர்வதேசப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் ஜுன் 7ஆம் நாள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நக ரில் நடைபெற்றது. சீன ஜனாதிபதி ஜிஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின், ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரேஸ் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். அப்போது, நிலையான வளர்ச்சி யைப் பின்பற்றி, செழுமை மற்றும் அரு மையான உலகத்தைக் கூட்டாக உருவாக்குவது என்ற தலைப்பிலான உரையை ஜிஜின்பிங் நிகழ்த்தினார்.இந்த உரையில் அவர் கூறியதாவது: உலகின் மிகப் பெரிய வளரும் நாடா கவும், பொறுப்பேற்கும் பெரிய நாடாக வும் விளங்கும் சீனா, நிலையான வளர்ச்சி தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றி, நிலையான வளர்ச்சிக் கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப் படுத்துவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. நிலையான வளர்ச்சி, உலகின் மிகப் பெரும் பாலான நாடுகளின் பொதுவான கோரிக்கைக்குப் பொருத்தமாக அமை யும். பன்னாடுகளுடன் இணைந்து, புதிய நிலையான வளர்ச்சிப் பாதையை திறந்து வைக்க சீனா விரும்புகிறது என்று ஜிஜின் பிங் கூறினார்.
மேலும், அமைதி மற்றும் வளர்ச்சி ஆகியவை இன்னும் தற்காலத்தின் கருப்பொருள் ஆகும். மனித குலத்தின் எதிர்காலமும், பல்வேறு நாடுகளின் நலன்களும், முன்பு இல்லாத அளவில் தற்போது அவ்வளவு நெருக்கமாக ஒன்றிணைந்துள்ளது. சர்வதேச சமூ கத்தில், புதிய பிரச்சனைகள் மற்றும் புதிய அறைகூவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித குலம் மீண்டும் வரலாற்றின் குறுக்குச்சாலை யில் நிற்கிறது. இதற்கிடையில், தொடர வல்ல வளர்ச்சி, தற்போதைய உலகளா விய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான “தங்க சாவி“ என்று ஜிஜின்பிங் சுட்டிக் காட்டினார். இந்நிலையில், புவியின் நிலையான அமைதியை மேம்படுத்தி, செழுமை மற்றும் அருமையான உல கத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு தரப்புகளுடன் இணைந்து கூட்டு முயற்சி எடுக்க சீனா விரும்பு கிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகமயமாக்கலுக்கு எதிர் நிலை, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானம், கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதஒழிப்பு உள்ளிட்டவை குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு ஜிஜின்பிங் பதில் அளித் தார். அப்போது, உலகமயமாக்கல், வரலாற்றுப் போக்கில் கால ஓட்டமாக திகழ்கிறது. உலகமயமாக்கலை முன் மொழிபவராகவும், பேணிகாப்பவ ராகவும் சீனா விளங்குகிறது என்று ஜிஜின்பிங் குறிப்பிட்டார்.