tamilnadu

img

கொரோனா தடுப்பூசி தயார்?

இன்று முதல் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கும்

லண்டன், ஏப்.22- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தமுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தும் சோதனை இன்று (வியாழக் கிழமை) முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு அறி வித்துள்ளது. கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி கள் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும் என்றும் கூறினர். தற்போது தடுப்பூசி பணிகள் நிறைவடைந்து விட்டன.

ChAdOx1 என்று பெயரிடப்பட்ட இந்த மருந்து என்பது சத வீத வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படு கிறது. ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறு கையில், ‘ChAdOx1’ தடுப்பூசி சார்ஸ் கோவிட்-2 கொரோனா வைரசுக்கு எதிராகச் செயல்படும் என்றார். இங்கிலாந்தின் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் டவுனிங் ஸ்ட்ரீட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சிக் குழுவுக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க அரசாங்கம் 20 மில்லியன் பவுண்டுகள் வழங்கும். லண்டனின் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுக்கு மேலும் 22.5 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் 

மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனத்து டன் இணைந்து செயல்படும் சோதனை செயல்முறைகளை குழு துரிதப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, தடுப்பூசி வியாழக்கிழமை முதல் மனிதர்கள் மீது செலுத்தி சோதனை செய்யப்படும். கொரோனா-வை தோற்கடிப்பதற்கு சிறந்தது ChAdOx1 தடுப்பூசி என்றார். இந்தத் தடுப்பூசியில் முழு வெற்றி கிடைத்துவிட்டால், “மனிதநேயத்துடன் கூடிய விரைவில்” பிரிட்டிஷ் மக்களுக்கு கிடைக்கச் செய்ய அதற்கான உற்பத்தி யில் அரசாங்கம் முதலீடு செய்யும் என்றார்.