tamilnadu

img

உலக நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - 3,122 பேர் பலி

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 3,122 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் உகான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கியது. உலகம் முழுவதும் 67 நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளதாகவும், இதுவரை 3,100க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகி உள்ளதாகவும், 90,853 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கோரோனா பாதிப்பு காரணமாக ஈரானில் 66 பேரும், இத்தாலியில் 52 பேரும், தென் கொரியாவில் 28 பேரும், ஜப்பானில் 12 பேரும், அமெரிக்காவில் 6 பேரும், ஹாங்காங் 2 பேரும், பிரான்சில் 2 பேரும் பலியாகி உள்ளனர். 

இந்த வைரஸ் ஜப்பான், ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், வியட்நாம், மெக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, நார்வே, நெதர்லாந்து, சுவீடன், லெபனான், ஐஸ்லாந்து, ஈராக், ரஷ்யா, பிரேசில், எகிப்து, போர்ச்சுக்கல், அயர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, பெல்ஜியம், பின்லாந்து, கிரீஸ், சவுதி அரேபியா, நியூலாந்து, ஆஸ்திரேலியா, நைஜீரியா, துனிசியா, பெலாரஸ், லாத்வியா உள்பட 67 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.