tamilnadu

img

தஞ்சை இளைஞருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

தஞ்சாவூர், பிப்.1- தஞ்சை மாவட்டம் துலுக்கவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் அய்யாகண்ணு என்பவர் சீனாவிலிருந்து சில தினங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்த தகவல் கிடைத்ததையடுத்து, சனிக் கிழமையன்று செருவாவிடுதி அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ரா ஜன்  மருத்துவக் குழுவினருடன் சென்று அவரை பரிசோதனை செய்ததில் அவர் ஆரோக் கியமாக உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதுமில்லை எனத் தெரிய வந்தது.  ராமச்சந்திரன்அய்யாக்கண்ணு, பெங்க ளூர் டாடா புராஜக்ட் லிமிடெட் கம்பெனி மூலம் இந்தியாவை சார்ந்த 20 பேர்களுடன் ஷாங்காய் நகரில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அனைவரும் இந்தியாவிற்கு அனுப்பப் பட்டுள்ளனர்.  இதையடுத்து, அவருக்கு வட்டார சுகா தார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் வி.தவமணி மற்றும் களப்பணியாளர்களைக் கொண்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

;