tamilnadu

img

கொரோனா வைரஸ்... இத்தாலியில்  பலியானோர் எண்ணிக்கை 1,400-ஆக உத்தரவு 

ரோம்
சீனாவில் இருந்து தனது ஆட்டத்தைத் துவக்கிய கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது உலகையே தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவுக்கு அடுத்து அதிக பாதிப்பைச் சந்தித்துள்ள ஐரோப்பா நாடான இத்தாலி அவசர நிலை பிரகடனம் அறிவித்து தீவிரமாகக் கண்காணித்தாலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியவில்லை.  

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 170-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். புதிதாக 3,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இத்தாலியில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 1,437-ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,000 ஆக உயர்ந்துள்ளது.  

;