tamilnadu

img

கோவிட் நெறிமுறைகளை மீறுவது யாருக்கான சவால்? எதிர்க் கட்சிகளுக்கு கேரள முதல்வர் கேள்வி

திருவனந்தபுரம், ஜுலை 22- கோவிட் நெறிமுறைகளை மீறி போராட்டம் நடத்துவதாக அறி வித்தவர்களின் சவால் யாருடன்? உயர் நீதிமன்றத்துடனா? அல்லது இந்த நாட்டின் சாதாரண மக்களு டனா? என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பினார். செவ்வாயன்று திருவனந்த புரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறிய தாவது:  அனைத்திலும் எதிர்மறையான அணுகுமுறையை மேற்கொள்வது மட்டுமல்ல, அரசும் சுகாதார ஊழி யர்களும் கூறுவதை பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிற போத னையையும் அவர்கள் (எதிர்க்கட்சி கள்) செய்தனர். அதற்கு பொறுப் பான சிலரே தலைமை வகிக்கவும் செய்தனர். அவ்வாறு கட்டமைக்கப் பட்ட பொதுப்புத்தி நமது பாது காப்பு நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தியுள்ளதா என்பதை அவர்களே சிந்திக்கட்டும். ஒன்று பட்டு இந்த கொள்ளை நோயை எதிர் கொள்ள வேண்டும் என்கிற நோக்கம் மட்டுமே அரசுக்கு உள்ளது என முதல்வர் கூறினார்.  கேரளத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் கோவிட் தடுப்பு நடவ டிக்கைகள் நடைபெற்று வரு கின்றன.

இந்த நோய் தொற்று ஆபத் தானது என தெரிந்துகொண்ட நிமி டம் முதல் அதனை தடுப்பதற்கான முயற்சிகளை நாம் துவக்கினோம். அதன் பலனாகத்தான் முதற் கட்டத்தில் இங்கு வந்த நபர்களிட மிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நம்மால் முடிந்தது. அதையே இனியும் தொடர வேண்டும். மாறாக அதற்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்க கூடாது. இதுபோன்ற வர்கள் தங்களது முடிவை மறுபரி சீலனை செய்வது நல்லது.  மீன் தொழிலாளர்களை அரசு குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது என்பதாக ஒரு பிரச்சாரத்தை இந்த கும்பல் நடத்துகிறது. மாநிலத்தில் இந்த கட்டத்தில் உருவான கிளஸ்டர்கள் பெரும்பாலும் கடற்க ரை பகுதிகளாகும். அது யாருடைய குற்றமும் அல்ல. அதிக அளவிலான ஆட்கள் புழங்கும் பகுதியே மீன் பிடித்தலும் விநியோகமும். கோவிட் அச்சுறுத்தல் அதிகரித்தபோது நாமெல்லாம் அந்த ஆபத்தை பார்த்தோம். அதனால்தான் தொடக்கத்திலேயே மீன் துறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீன்பிடித்தல் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாகும். கடலுடன் மல்லுக்கட்டும் அன்றாடம் காய்ச்சிகள் மீன் தொழிலாளிகள்.  

ஒருவேளை கோவிட் பரவலைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் மிகவும் கடினமான துயரங்களை அனுபவிக்கும் சமூகம் கடற்கரையில் உள்ளவர்கள். அங்கு நோய் பரவல் ஏற்படும்போது சாத்தியமான அனைத்து தலையீடு களையும் செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். அதன்படி கடற்கரைகளில் உருவான கிளஸ்டர்களில் கட்டுப்பாடுகள் கடுமையானதும் மீன் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரசால் அவசர உதவி அளிக்கப்பட்டது.  திருவனந்தபுரத்தில் பூந்துறை, மாணிக்கவிளாகம், புத்தன்பள்ளி பகுதிகளில் அதிக அளவில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டபோது அரசு பெரிய அளவில் தலையிட்டது. அன்று பூந்துறை என்கிற இடத்தின் பெயரை கூறியதாக ஆட்சேபம் எழுந்தது. அது ஒரு பகுதியை அவமானப்படுத்தல் என்பதாக சிலர் பிரச்சாரம் செய்தனர். ஆனால், அப் பகுதி மக்களை அதெல்லாம் பாதிக்கவில்லை. அதனால்தான் பொய் பிரச்சாரங்களை புறந்தள்ளி சுகாதார ஊழியர்களுக்கு அவர்கள் பூச்செண்டுகள் கொடுத்து வர வேற்றனர்.  

புலம்பெயர்ந்தோர் விசயத்தி லும் இதே அணுகுமுறைதான். கோவிட் தீவிரமான இடங்களிலி ருந்து வருவோர் பாதுகாப்பு ஏற்பாடு களை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்தியது. பரிசோதனை போன்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டன. அன்று அவற்றை சீர்குலைக்கும் முயற்சியாக அரசு புலம்பெயர்ந்தோருக்கு துரோகம் செய்கிறது என்கிற பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இங்கு வரும் புலம் பெயர்ந்த சகோர சகோதரிகளுக்கு விலக்கு எதையும் ஏற்படுத்த வில்லை. ஒருவர்கூட அரசின் அனு மதி இல்லை என்று நிறுத்தி வைக்கப்படவில்லை. விமானங்க ளுக்கான அனுமதி மறுக்கவில்லை. எனினும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்கிற வன்முறை பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இப்போது யாராவது அதை கூறு கிறார்களா? விமானத்தில் வரு வோருக்கு பரிசோதனையோ பிபிஇ உடைகளோ வேண்டாம் என இந்த கும்பலால் கூற முடியுமா? கேரளத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்திய பிறகு வெளி யில் இருந்து இதுவரை 6,20,462 நபர்கள் வந்துள்ளனர்.

வெளிநாடு களில் இருந்து வந்தவர்கள் மட்டும் 2,35,231 பேர். இதில் கோவிட் அறிகுறிகள் காணப்பட்டவர்க ளுக்கும் நோய் தொற்றுக்கு வாய்ப் புள்ளவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளி யில் இருந்து வந்த 3225 பேரிடம் கோவிட் கண்டறியப்பட்டது. அதில் 1939 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 56 நாடுகளில் இருந்து 1351 விமானங்கள் வந்தன. சவுதி  அரேபியாவில் இருந்து விமானங் கள் குறைவு என்கிற புகார் எழுந்தது. அங்கிருந்து 34,626 பேர் இதுவரை வந்துள்ளனர்.  நமது நாட்டில் இந்த நோய் பரவலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அன்றும் இன்றும் அரசின் பிடிவாதமான நிலைப்பாடு. அதற்கு சாதகமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வருவோர் நமது சுகாதார எல்லைக்குள் வரவேண்டும் என்பதால்தான் பாஸ் கட்டாயமாக் கப்பட்டது. பாஸ் இல்லாமல் வந்தால் அவர்கள் எங்கு சென்றனர், எங்கி ருந்து வந்தனர் என்பது குறித்து விவரம் இல்லாமல் போய்விடும்.

அதன் விளைவு நோய் பரவலை தடுத்து நிறுத்த முடியாது என்பதுதான்.  நமது சுகாதார நடவடிக்கை களை தகர்க்க மாநில எல்லையில் போராட்டம் நடத்தப்பட்டது நினை வில்லையா? அன்று அவர்கள் கேட்டது கேரளத்துக்கு வர பாஸ் எதற்கு என்று. அதன் பொருள் இங்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நோய் பரவட்டும் என்பதல்லவா? அப்படிப்பட்டவர்கள்தான் இப்போது மீன் தொழிலாளிகளுக்கு அரசு எதிராக உள்ளது என்கிற இழி வான பிரச்சாரத்தை மேற்கொண்டுள் ளனர். இங்கு அவர்களுடன் கேட்ப தற்கு ஒன்று மட்டுமே உள்ளது. இந்த கோவிட் காலத்தில் உங்களிடம் நேர்மறையான அணுகுமுறை இருந்ததா? நோய் பரவுவதைத் தடுக்க நீங்கள் ஏதாவது பங்களிப்பு செய்தீர்களா? மாறாக, நோயைப் பரப்புவதற்கு நீங்கள் மேற்கொண்ட ஏராளமான முயற்சிகளை சுட்டிக் காட்ட முடியும். கோவிட் நெறிமுறையை மீறி போராட்டம் நடத்துவதாக அறி வித்தவர்களின் சவால் யாருடன்? உயர் நீதிமன்றத்துடனா? அல்லது இந்த நாட்டின் சாதாரண மக்களு டனா? நீங்கள் கோவிட் நடத்தை விதிகளை மீறினால் உங்களுக்கு மட்டுமல்லவே ஆபத்து. அது இந்த நாடு முழுவதற்கும் ஆபத்தல்லவா? அதற்கு நீங்கள் விடுக்கும் செய்தி யல்லவா இது? இதை புரிந்து கொள்ளாமலா இந்த மோசமான அரசியல் விளையாட்டுக்கு நீங்கள் தயாராகி வருகிறார்கள்? - என்று முதல்வர் கேட்டார்.