tamilnadu

அரசியல் கூடாது என்ற கல்லூரியில் வன்முறைகள் அதிகரிப்பு; புறக்காவல் நிலையம் அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, செப். 8- மாணவ அரசியலை தடைசெய்த கல்லூரியில் மோதல்கள் அதிகரித் துள்ளதால் அந்த  கல்லூரிக்கு அருகில் புறக்காவல் நிலையம் அமைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 59 வழக்கு கள் பதிவாகியுள்ள குற்றிப்புரம் எம்இஎஸ் பொறியியல் கல்லூரி அருகில் புறகக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி பி.சுதீந்திரகுமார் இந்த உத்தரவை பிறப் பித்தார். விடுதி வசதி இருந்தபோதிலும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வெளியே வசிப்பதாக கல்லூரி முதல்வர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இவர்களுக்கு வெளியில் உள்ள சமூக விரோதிகளுடன் தொடர்பு ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் விடுதிகளுக்கு வர நீதிமன்றம் உத்தரவு வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டார். மெக்கானிக், கம்ப்யூட்டர் சயன்ஸ்  என வகுப்புகளாக பிரிந்தும் குழுக்களா கவும் மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு அச்சத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். கல்லூரி வளாகத்தினுள் நடப்பவை குறித்து ரகசிய அறிக்கை தயாரித்து அளிப்பதை மாவட்ட காவல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனத்தெரிந்தால் காவல்துறையினர் கல்லூரிக்குள் புகுந்து நடவடிக்கை எடுக்கலாம். கல்லூரியில் கட்டுப் பாட்டை கடைப்பிடிப்பதில் கல்லூரி முதல்வருக்கே பொறுப்பு உள்ளதாக வும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 019 மார்ச் 20இல் 2 மாணவர்களை கற்கள் மற்றும் தடியால் தாக்கிய வழக்கில் 9 மாணவர்களின் முன்ஜாமீன் மனுக்களை பரிசீலித்ததை ஒட்டியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ரூ.40,000 மதிப்புள்ள பத்திரம், குற்றிப் புறம் எஸ்ஏஎச்ஓ தீர்மானிக்கும் தொகைக் கான மூன்று நபர் ஜாமீன் ஆகியவற்று டன் 10 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்கிற நிபந்தனைகளுடன் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.