மூணாறு, ஆக.9- உற்றார் உறவினர்கள் நிலச்சரிவின் கோரப்பிடிக் குள் சிக்கிய நிலையில் மீட்புக்குழுவினரிடம், ‘அந்த மண்ணுக்கு கீழ என் புள்ளகள் இருக்கு சார்’ என்று நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக் கதறிய தாய் கருப்பாயியின் குரல் பெட்டிமுடி தேயிலைத் தோட்ட மெங்கும் எதிரொலித்தது. எழுபது வயதான கருப்பாயி அம்மாவின் கணவர் சண்முகம், மகள்கள், அவர்களது கணவன்மார், குழந்தைகள், சகோதரி சரஸ்வதி உள்ளிட்டோரை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘எப்படி யாவது அவங்கள திருப்பி தாங்க சார்’ அவரது அவ லக்குரலை எதிர்கொள்ள முடியாமல் அங்கு இருந்த பலரது கண்கணிலும் கண்ணீர் சுரந்தது. இயற்கை புரட்டிப்போட்ட அந்த மண்ணில் உறங்கி கிடப்போரில் கருப்பாயியின் பேரப்பிள்ளைகள் வரை உள்ளனர். மலை இடிந்து இறங்கி வந்து லயங்களின் (வரிசை வீடுகள்) மீது விழுந்த போது உயிர்தப்பிய சிலரில் கருப்பாயியும் ஒருவர். கணவன் சண்முகம் கண் ணன்தேவன் கம்பெனியின் தொழிலாளி. தகர்ந்து போன முன்வரிசை லயத்தில் உள்ள அடுத்தடுத்த அறைகளில் கருப்பாயியின் மகள்களான சோபனா, கஸ்தூரி, சீதாலட்சுமி ஆகியோரது குடும்பங்கள் வசித்தன. “என் மக கஸ்தூரி 5 மாச கர்ப்பிணியா இருந்தா..” வார்த்தைகளை முடிப்பதற்குள் கருப்பாயி துவண்டு விழுந்தார். லயத்தின் கடைசி அறையில் கருப்பாயி குடும்பம் தங்கியிருந்தது. மலை இடிந்து வரும் ஓசை யைக் கேட்டதும் கருப்பாயி வெளியே ஓடி வந்து விட்டார். அதற்குள் நிலம் தலைகீழாக புரண்டு வந்தது. மலை வெள்ளப்பாய்ச்சலில் இருந்து தப்பி பாது காப்பான இடத்திற்கு வந்து திரும்பி பார்த்த போது உறவினர்கள் யாரும் இல்லை. மருமகன்கள் கண் ணன், பிரதீப், ராஜா, பேரப்பிள்ளைகளான விஜய லட்சுமி (9), விஷ்ணு (9), நதியா (11), பிரியதர்ஷினி, லக்சணஸ்ரீ, தனுஷ்கா ஆகியோரை இன்னும் காண வில்லை.