tamilnadu

img

இருமுறை பாம்பு கடிக்கு உள்ளாக்கி மனைவியை கொன்றவர் கைது

கொல்லம், மே 25- இரண்டு முறை பாம்பு  கடிக்கு உட்படுத்தி மனைவியை  கொன்றவர் கைது செய்யப் பட்டார். கொல்லம் மாவட்டம் அடூ ரைச் சேர்ந்தவர் சூரஜ். வங்கி  ஊழியரான இவரது மனைவி  உத்ரா (25), இவர்களுக்கு ஒரு  குழந்தை உள்ளது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி அடூரில்  உள்ள சூரஜின் வீட்டில் வைத்து உத்ராவை பாம்பு  கடித்தது. நீண்ட சிகிச்சைக் குப் பிறகு அவர் உயிர் பிழைத்து வீடு திரும்பினார். சிகிச்சை தொடர்ந்த நிலை யில் அஞ்சலில் உள்ள குடும்ப  வீட்டில் வைத்து மே 7 ஆம்  தேதி மீண்டும் பாம்பு கடித்து  உத்ரா உயிரிழந்தார். முதல்  முறை பாம்பு கடித்தபோது  உத்ராவின் 92 பவுன் நகை களை வங்கி லாக்கரிலிருந்து சூரஜ் எடுத்துள்ளார். அதை யொட்டி அவர் மீதுஉத்ரா வின் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இம்முறை வீட்டின் மாடி யில் உள்ள ஏசி அறையில்  உத்ரா தூங்கிக் கொண்டி ருந்தபோது எப்படி பாம்பு  நுழைந்து கடித்திருக்க முடி யும் என சந்தேகம் எழுந்தது. அதுகுறித்து புறநகர் எஸ்.பி  ஹரிசங்கரிடம் புகார் அளித்த னர். விசாரணையில் பாம்பு பிடிக்கும் நபர் ஒருவருடன் சூரஜ் தொடர்பில் இருந் தது செல்பேசி மூலம் தெரிய வந்தது. அவரிடம் விசா ரித்தபோது வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதற்காக என்று கூறி ரூ.10 ஆயிரத்துக்கு கொடிய விஷமுள்ள கருநாகப் பாம்பை தன்னிடமிருந்து சூரஜ் வாங்கியதாக தெரி வித்துள்ளார். அதைத் தொடர்ந்து சூரஜ் மனை வியை பாம்பு கடிக்கு  உள்ளாக்கி கொலை செய்த தை ஒப்புக்கொண்டார். மனைவியின் உடைமை களை அபகரிக்கவும், வேறு திருமணம் செய்து கொ ள்ளும் நோக்கத்துடனும் இந்த கொலை நடந்துள்ள தாக கருதப்படுகிறது. ஞாயி றன்று கைது செய்யப்பட்ட சூரஜ் திங்களன்று காலை குடும்ப வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கொன்று  புதைக்கப்பட்ட பாம்பையும் அதை கொண்டுவர பயன்ப டுத்திய பிளாஸ்டிக் பாட்டில் போன்ற தடயங்களையும் சேகரித்தனர்.