திருவனந்தபுரம், ஆக.17- கம்யூனிஸ்ட் இயக்கத் தின் முன்னோடியான மூத்த தலைவர் தோழர் பி.கிருஷ்ண பிள்ளை மறைந்து 72 ஆண்டு கள் நிறைவடைவதை யொட்டி சிறப்பாக இந்த நாளை நினைவுகூருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயற்குழு கேட்டுக்கொண் டுள்ளது. கிருஷ்ணபிள்ளையும் கம்யூனிஸ்ட் இயக்கமும் மக்கள் சிரமத்தில் இருக்கும் போதெல்லாம் அவர்கள் கண்ணீர் சிந்தாமல் அயராது உழைத்ததை இந்நேரத்தில் நினைவுகூருவோம். அந்த பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து, கேரளம் இன்று எதிர்கொள்ளும் கோவிட் கொள்ளை நோயிலிருந்து மீண்டு வர கட்சி ஊழியர்க ளும், மக்கள் இயக்கங்களின் செயற்பாட்டாளர்களும் தலையிட வேண்டும். கிருஷ்ணபிள்ளை மறைந்து 72 வருடங்கள் ஆகி விட்டன. 1937-இல் கோழிக் கோட்டில் உருவாக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி கிளையின் செயலா ளராவார். தேசிய இயக்கத்தி லும் தலைமை பாத்திரம் வகி த்தார். கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு செயலா ளராக இருந்தார். ஆலப்புழா கயிறு தொழிலாளர்களை யும், கோழிக்கோடு காட்டன் மில் தொழிலாளர்களையும், கண்ணூரில் பீடி- நூற்பு தொ ழிலாளர்களையும், மலபா ரில் விவசாயிகளையும் திரட் டுவதில் கிருஷ்ணபிள்ளை யின் பங்கு மகத்தானது என சிபிஎம் மாநிலச் செயற்குழு புகழஞ்சலி செலுத்தி யுள்ளது.