tamilnadu

இரட்டைக் கொலை செய்தவர்கள் தலைமறைவாக உதவிய பெண் கைது

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் வெங்ஙாரமூடு இந்திய ஜனநாயக வாலிபர்சங்க ஊழியர்களை கொலை செய்த காங்கிரஸ் குண்டர்கள் தலைமறைவாக இருக்க உதவியமதபுரத்தைச் சேர்ந்த பிறீஜா என்கிற பெண் கைது  செய்யப்பட்டார். இதோடு இந்த வழக்கில் கைது செய் யப்பட்டோர் எண்ணிக்கை ஏழானது.கொலையாளிகள் பத்தம்திட்டக்கு தப்பிச்செல்ல உதவியதும் பிறீஜாதான்.இதற்காகஇவர் ஒரு கார் ஏற்பாடு செய்துகொடுத்துள்ளார். கொலையாளிகளின் நகர்வை அறிந்துகொண்ட காவல்துறையினர் கார்
ஓட்டுநர் மூலம் அவர்களை நெருங்கி கைது செய்தனர்.வெங்ஙானூர் இரட்டைக்கொலைக்கான காரணம் அ0ரசியல் பகைதான் என கைது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ், ஐஎன்டியுசி ஊழியர்களாவர். புல்லுப் பாற முத்திக்காவு பண்ணை வீட்டில் வைத்து கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சதித்திட்டத்தில் மேலும் சிலர் பங்கேற்றதாக அறிக்கையில் விளக்கப்பட்்டுள்ளது.

;