tamilnadu

img

யுஏபிஏ சட்டத்தை எல்டிஎப் ஏற்காது ஏ.விஜயராகவன் பேட்டி

திருவனந்தபுரம், அக்.3- கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தை பயன்படுத்தியது அரசின் நிலைபாட்டுக்கு எதிரானது என எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து ஏ.விஜயராகவனம் மேலும் கூறியதாவது: யுஏபிஏ தொடர்பான மாநில அரசின் நிலைபாட்டை காவல்துறையினர் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில் அரசு தலையிட வேண்டும். இதுகுறித்து விசாரிக்க நீதிபதி நியமனம் செய்யப்பட்டிருப்பது அரசு விழிப்புடன் இருப்பதன் பகுதியாகும். கைதான மாணவர்களுக்கு சட்டரீதி யான உதவிகள் வழங்கப்படும். மாணவர்கள் கைது செய்யப்பட்டதும். மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப் பட்டதும் வெவ்வேறு பிரச்சனைகள்.  மாவோயிஸ்ட்டுகளின் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகளால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் காட்டுக்குள் வந்தது புல் பறிக்கவா? மவோயிஸ்ட்டுகள், மக்கள் மத்தியில் செயல்பட்டு அவர்களை திரட்டி போரா டட்டும். மாவோயிஸ்ட்டுகளை ஜனநாயக நீரோட்டத்துக்கு கொண்டுவர வேண்டும் என்பதே எல்டிஎப் நிலைபாடு. இவ்வாறு அவர் கூறினார்.

டிஒய்எப்ஐ ஆதரவு
யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுகேப், தாஹா ஆகியோரது வீடுகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஞாயிறன்று சென்றனர். குடும்பத்தினருக்கு ஆறு தல் கூறியதோடு இருவரின் விடுதலைக்கு உதவுவதாகவும் தெரிவித்தனர்.