tamilnadu

img

கோவிட்டில் உயிரிழந்த நகராட்சி ஊழியரின் சடலம் பொது மயானத்தில் அடக்கம் செய்ய பாஜக எதிர்ப்பு

கோட்டயம், ஜூலை 27- கோவிட் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த முன்னாள் நகராட்சி ஊழியரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய கோட்டயம் நகராட்சி பாஜக கவுன் சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். அவ ருக்கு பக்கபலமாக காங்கிரசாரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரி அருகில் வசித்தவர் அவுசேப் ஜார்ஜ் (83). முன்னாள் நகராட்சி ஊழிய ரான இவர் கோவிட் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இவரது சடலத்தை கோட்ட யம் நகராட்சிக்கு சொந்தமான முட்டம் பலம் பொது மயானத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பாஜக கவுன்சிலர் டி.என். ஹரிகுமார் தலைமையில் திரண்ட ஒரு கும்பல் மறியலில் ஈடுபட்டது. இவருடன் சில காங்கிரஸ்காரர்க ளும் இணைந்து கொண்டனர். அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டு மல்லாது வெளியிலிருந்தும் பாஜக வினர் திரட்டப்பட்டனர்.  

பாஜக பொய் பிரச்சாரம்
பொதுவழியைத் தடுத்து அவர்கள் கட்டியிருந்த தடுப்புகளை காவல்துறையினர் அகற்றினர். அதன் பிறகும் மணிக்கணக்கில் அவர்களது போராட்டம் நீடித்தது. காவல்துறையினரிடமும் அதிகாரி களிடமும் கவுன்சிலர் வாக்குவா தத்தில் ஈடுபட்டார். மயானத்தில் சட லத்தை எரித்தால் எழும் புகையின் ஊடாக நோய் கிருமி பரவும் என பொதுமக்களை தவறான முறையில் தூண்டி பாஜகவினர் அவர்களை திரட்டினர். இதன் மூலம் மத உணர் வைத் தூண்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் கோட்டயம் கிழக்கு காவல்துறையினரும், வரு வாய் அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.என்.வாசவன் உள்ளிட்ட தலைவர்களும், சட்டமன்ற உறுப்பி னர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மாவட்ட ஆட்சி யருடன் தொடர்பு கொண்ட பிறகு தற்காலிகமாக முட்டம்பலம் மயா னத்தில் அடக்கம் செய்ய வேண் டாம் என முடிவு செய்யப்பட்டது. இதன்பிறகு கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.  அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் மயானமாகும் இது. இதற்கு முன்பு எப்போதும் இத்த கைய பிரச்சனை எழுந்ததில்லை. தொடக்கத்திலேயே போராட்டத் திற்கு காங்கிரஸ் கட்சியினர் மறை முகமாக ஆதரவளித்தனர். சாதிய பாகுபாடு குறித்த பிரச்சாரத்தை காங்கிரசார் எதிர்க்கவில்லை. இது குறித்து திருவஞ்சூர் ராதா கிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இத்தகைய சம்பவத்தி ற்கு பின்னணியில் பல காரணங் கள் இருக்கலாம் என பதிலளித்தார்.

சடலத்தை வீட்டுக்கு கொண்டு போ
கோவிட் தடுப்பு சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு கவுன்சிலர் ஹரிகுமார் முகக்கவசம் கூட அணி யாமல் நூற்றுக்கும் மேற்பட்டோரை திரட்டி இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தினார். சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், “ சடலத்தை உன் வீட்டுக்கு கொண்டு போ” என்று கூறி னார். அடக்கம் செய்ய தேவாலயத்து க்கு சொந்தமான இடம் உள்ள போதி லும் இங்கே எதற்கு கொண்டு வந்தீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.