tamilnadu

img

கேரள திரைப்பட அகாடமி அறிக்கை

திருவனந்தபுரம், அக்.6- கும்பல் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பிய திரைப்பட இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட சமூக செயற்பாட்டா ளர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டதற்கு கேரள மாநில திரைப்பட அகாடமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அடூருடன்’ என்கிற கலாச்சார சங்கமம் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.  இதுகுறித்து அக்காடமியின் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:

அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள கருத்து சுதந்திரத்தை அப்பட்டமாக மீறு வதாகும் இது. தனது திரைப்படங்களில் உன்னதமான மனித விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கும் கலைஞர் அடூர் கோபாலகிருஷ்ணன். சமூகத்தில் நடக்கும் மனிதாபிமானமற்ற மோசமான செயல்கள் குறித்து பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் பெயரால் வழக்கு தொடுக்கும் நடவடிக்கை ஒரு நாகரீக ஜனநாயக சமூகத்திற்கு உகந்த தல்ல.  கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அடூரை வகுப்புவாதிகள் இழிவுபடுத்துவதைக் கண்டித்து திரைப்பட அகாடமி கலாச்சார அமைப்புகளுடன் இணைந்து திரிச்சூரில் ‘அடூருடன்’ என்கிற கலாச்சார சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளர்ச்சிக் குரல்களை ஒடுக்கும் ஆட்சி அதி கார நடவடிக்கையை வன்மையாக கண் டிப்பதோடு கருத்துகளை வெளிப்படையாக கூற அடூருக்கு ஒருமைப்பாட்டையும் தெரி வித்துக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொடியேரி பாலகிருஷ்ணன் சந்திப்பு சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடி யேரி பாலகிருஷ்ணன் அடூர் போபால கிருஷ்ணனை சந்தித்து பேசினார். அப்போது அவர், நாட்டு மக்களின் பாதுகாப்புக்காக கடிதம் எழுதினால் வழக்கு பதிவு செய்து வேட்டையாடப்படுவர் என்கிற நிலைக்கு நிகழ்வுகள் சென்றுகொண்டிருக்கிறது என தெரிவித்தார்.