tamilnadu

img

கேரளா:  3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலார்ட் எச்சரிக்கை 

கேரளாவில் இடுக்கி, ஆலப்புழா,. எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாலும், அந்த பகுதி முழுவதும் சகதி நிறைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
கனமழைக்கு இதுவரை 88 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காணாமல் போன 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மீண்டும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.