ஆலப்புழா, செப்.1- கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் அரு கில் சென்று காலை தூக்கி செல்பி எடுத்தபோது பிர ணவ் தனது கனவு நனவான தாக மகிழ்ச்சி அடைந்தார். இரு கைகளும் இல்லாத ஆலத்தூர் காட்டுசேரி பிர ணவின் வாழ்க்கை லட்சிய மாக இருந்தது கிரிக்கெட் தெய்வம் சச்சின காண வேண்டும் என்பது. நேரு கோப்பை வள்ளம் களிக்கு வரும் சச்சினை பார்க்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை சுருக்கமாக முகநூலில் பதிவிட்ட போது அது வரலாறாக மாறும் என்பது பிரணவுக்கு தெரிந்திருக்கவில்லை. சமூக ஊடகங்களில் பிரணவ் மற்றும் அவரது நண்பரது குறிப்புகள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கின் கவனத்தில் பட்டது. உடனே அவர் சச்சினை காணும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக பிர ணவின் தந்தையிடம் தெரிவித்தார். சனியன்று அதிகாலையே தந்தை சுப்ரமணியன், தாயார் ஸ்வர்ணகுமாரி, சகோதரன் பிரவீண் ஆகியோ ரோடு ஆலப்புழைக்கு பயணமானார் பிரணவ். மதியம் லேக் பாலஸ் ரிசார்ட்டுக்கு வந்தடைந்தார். சச்சின் என்கிற அதிசயம் தனது அருகில் வந்தது கனவில் நடப்பது போல் பிரணவ் பிரமித்து நின்றார். கால்களால் தீட்டி இதயத்தில் சுமந்து வந்ததுபோல் கொண்டுவந்த சச்சி னின் ஓவியத்தை கால்களால் வழங்கினார். அதே கால்க ளால் செல்போனில் செல்பி எடுத்தபோது வியப்பில் மூழ்கினார் சச்சின். அமைச்சர்கள் தாமஸ் ஐசக், கடகம் பள்ளி சுரேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.