tamilnadu

பி.கிருஷ்ணபிள்ளை நினைவு தினம் கேரளம் முழுவதும் அனுசரிப்பு

ஆலப்புழா, ஆக.20- கேரள கம்யூனிஸ்ட் இயக்கத்தை உரு வாக்கிய தலைவரும் மறுமலர்ச்சி நாயகனு மான தோழர். பி.கிருஷ்ணபிள்ளையின் நினைவு நாள் கேரளம் முழுவதும் அனுஷ்டிக்கப் பட்டது. தோழர். பி.கிருஷ்ணபிள்ளை பாம்பு கடித்து இறந்த கண்ணார்காடு நினைவி டத்தில் சிபிஎம் ஆலப்புழா மாவட்ட செயலா ளர் ஆர்.நாசர் செங்கொடி ஏற்றி வைத்தார். அவர் மீளாத்துயில் கொள்ளும் ஆலப்புழா பெரிய சுடுகாட்டில் தலைவர்களும் ஊழி யர்களுமாக ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். ஏகேஜி சென்டரில் நடந்த நிகழ்ச்சியில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் எம்.வி.கோவிந்தன், தேசாபிமானி முதன்மை ஆசிரியர் பி.ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிபிஎம், சிபிஐ அணியினரும் வெகுஜன அமைப்பினரும் அலுவலகங்களிலும் முக்கிய மையங்களிலும் கொடி ஏற்றினர். கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சி கள் நடந்தன.