tamilnadu

img

எதிர்க்கட்சிகள் வன்முறை செயல்பாடுகளை உருவாக்குகின்றன அமைச்சர் இ.பி.ஜெயராஜன் பேட்டி

திருவனந்தபுரம், ஆக.27- யுடிஎப்-பும், பாஜகவும் ஆலோ சித்து வன்முறையை கட்ட விழ்த்து விடுவதற்கான செயல் பாடுகளை உருவாக்குவதாக அமைச்சர் இ.பி.ஜெயராஜன் கூறினார். கேரள தலைமைச் செயல கத்தில் செவ்வாயன்று தீப் பிடித்தது குறித்து செய்தியாளர்க ளிடம் அவர் மேலும் கூறுகை யில், இயல்பாக நடக்கும் சம்ப வத்தில், உடனடியாக சம்பவ  இடத்திற்கு வந்ததால் அவர்க ளுக்கு இதில் பங்குள்ளதா என சந்தேகிக்க வேண்டும். இது வேண்டுமென்றே யுடிஎப்- பாஜக தலைவர்கள் திட்டமிட்டு நடத்துவதாகும். தலைமைச் செயலகத்தினுள் எப்போது வேண்டுமானாலும் ஏதேனும் ஒரு தலைவர் கும்பலை திரட்டி வந்து வன்முறையில் ஈடுபடுவாரா?.  அரசு அலுவலகங்களுக்கு தடியும் கல்லும் கொண்டு வந்து காவல்துறையினர் மீது இவர்கள் தான் தாக்குதல் நடத்தி னர். தலைமைச் செயலகமும் அலுவலகங்களும், வன்முறை யாளர்கள் புகுந்து விளையாடும் மையமாக்க அனுமதிக்க முடி யாது. தீப்பிடிப்பது கே.சுரேந்தி ரனுக்கு முன்னதாகவே தெரிந்தி ருக்கிறது என்றல்லவா புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வன்முறையாளர்கள் எதையும் நடத்தும் தயாரிப்பில் உள்ளனர் என இ.பி.ஜெயராஜன் கூறினார்.