tamilnadu

img

சபரிமலைக்கு செல்லும் பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 

கேரள அரசு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கோவிலுக்கு வரும் பொதுமக்கள் கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா சோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என சான்றிதழ் கொண்டு வர வேண்டும். கோவிலில் மண்டல மற்றும் மகர நிகழ்வுகள் 15ஆம் தேதி திறக்கவுள்ளது. பொதுமக்கள் கார்த்திகை 1 ஆம் தேதி (நவம்பர் 16 ஆம் தேதி) முதல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இணையம் வழியாக முன்பதிவு செய்யும் ஆயிரம் பொதுமக்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் கட்டாயமாக, தொற்று இல்லை என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். பம்பையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அங்கேயே சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டிற்கும் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.