tamilnadu

img

வழிகாட்டியும் வலிமையும் இ.கே.நாயனார்

நவகேரளம் படைக்க விலை மதிப்பற்ற நன்கொடையை அளித்த தலைவர், மக்கள் மன மறிந்து சமூகத்தில் தலையீடு செய்த கம்யூனிஸ்ட், நெருக்கடிகளுக்கு முன்பு தளராமல் நாட்டை வழிநடத் திய ஆட்சியாளர் போன்ற மிக உயர்ந்த நிலைகளில் உள்ளது தோழர் இ.கே. நாயனாருக்கான இடம். அனைத்து வகையிலும் கேரளியரின் மனங்க ளில் உயர்வான இடத்தை பிடித்த இ.கே.நாயனாரின் நூறாவது பிறந்த நாள் 2019 டிசம்பர் 9. குழந்தை பரு வத்திலேயே பாலர் சங்கத்தை தொடர்ந்து மாணவர் சங்கத்திலும் தீவிரமாக செயல்பட்டவர். இவ் வாறு வந்த தோழரின் அரசியல் வாழ்க்கை நவீன கேரள வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியாகும். தேசிய இயக்கத்தில் தீவிரமாக செயல் பட்டபோதே விவசாயிகளின் போராட்டங்கள் மூலமாக கம்யூ னிஸ்ட் அரசியலின் அமைப்பாள ரும் தலைவருமாக நாயனார் உயர்ந்தார்.  கேரளத்தில் மிக அதிக காலம் முதல்வராக செயல்பட்டவர் நாய னார்தான். விவசாய தொழிலாளர் ஓய்வூதியம், மாவேலி ஸ்டோர்ஸ், முழு எழுத்தறிவு, மக்கள் திட்ட மிடல் உள்ளிட்ட கேரளத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்த சீர்திருத்தங்களால் அமரத்துவம் பெற்றவர். 1957இல் (இஎம்எஸ்) அரசு அடித்தளம் அமைத்த வளர்ச்சிக்கான செயல்முறையை முன்னெடுப்பதில் தோழரின் பங்கு எடுத்துக்கூற வேண்டியதாகும். கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி யை கெட்டிப்படுத்துவதில் செயல் ஊக்கமுள்ள பங்கு வகித்தவர் நாய னார். மக்கள் பிரச்சனைகளை எதி ரொலித்த பத்திரிகையாளராகவும் கவனத்தை ஈர்த்தார். இலக்கியம் மற்றும் பயண அனுபவத்தை மக்க ளின் வாழ்க்கையுடன் இணைத்து கூறினார். நாடாளுமன்றம் அல்லாத செயல்பாடுகள் போலவே, நாடா ளுமன்ற செயல்பாடுகளிலும் கவ னத்தை கவர்ந்தார். நிலப்பிரபுத் துவத்துக்கும் ஏகாதிபத்தியத் துக்கும் எதிராக எழுந்த வெகுஜன முன்னேற்றத்தின் அடித்தளத்திலி ருந்து தோழரின் ஆளுமை உரு வானது. முதலில் காங்கிரஸ், பின் னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அதன்பிறகு கம்யூனிஸ்ட் கட்சி என புரட்சிகரமான முன்னேற்றத்தின் பகுதியாக நாயனாரின் அரசியல் நிலைபாடுகள் வளர்ந்து வந்தன.  கம்யூனிஸ்ட் இயக்கத்தினுள் ஏற்பட்ட இடது- வலது போக்கு களுக்கு எதிராக சமரசமில்லாமல் போராடியதிலும் கட்சியை புரட்சிகர பாதையில் வழிநடத்தவும் நாயனார் முன்னின்றார். கட்சியின் நிலைப் பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் கட்சியின் பார்வை யில் பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து எளிதாக முன்வைப்பதிலும் அவர் முன்மாதிரியாக திகழ்ந் தார். முன்வைக்கும் விதமும் அதில் உட்படுத்தும் அரசியல் அணுகு முறையும் விருப்பு வெறுப்பற்ற தலையீடும் நாயனாரை மக்களின் கண்மணியாக்கியது. மக்களின் துயரங்களில் அவர்களோடு அழ வும், சந்தோசத்தில் அதேபோன்று தன்னை ஐக்கியபடுத்திக் கொள்ளவும் செய்தார். முகமூடி யில்லாத இந்த அணுகுமுறை மக் களை மிகவும் ஈர்த்தது. கேரளத்தின் எந்த ஒரு பகுதி யையும், அங்குள்ள தனித்த பிரச்ச னைகளையும் நாயனார் அறிந்து வைத்திருந்தார். ஒரு போராளி யாகவும் அமைப்பாளராகவும் ஜொலித்த தோழரின் செயல்பாடு கள் அனைவராலும் அங்கீகரிக் கப்பட்டது. கேரளா உயிர்வாழ்வதற் கான புதிய வழிகளைத் தேடும் போது, முன்னால் நடந்து சென்ற ஈ.கே.நயனாரின் நினைவுகள் வழி காட்டியும் வலிமையும் என்பதில் சந்தேகமில்லை.