tamilnadu

img

ஊடக - எதிர்க்கட்சிகள் சதி ஏன்? பாரு அம்மாவும், கேரளத்தின் மகிழ்ச்சியும்

பாலக்காடு, ஆக.23- கொள்ளை நோய் காலத்தில் வீடு தேடி வந்தது விவாதங்கள் அல்ல, பட்டினி கிடக்கா மல் மக்களை அரவணைத்த ஒரு அரசின் கவனிப்பு. சமூகநல ஓய்வூதியம் முடக்கமில் லாமல் கிடைக்கச் செய்த அரசின் மீது அள வற்ற அன்பையும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார் மன்னார்காடு தெங்கரயைச் சேர்ந்த பாரு அம்மா. இவரது இந்த சிரிப்பை விவாதங்களால் அழிக்கவோ மறைக்கவோ முடியாதது. மக்களின் களங்கமற்ற சிரிப்பை 103 வயது பாரு அம்மா போன்றவர்கள் மூலம் கேரளம் காண்கிறது. நாடு முழுவதும் கோவிட் ஊரடங்கு அறி விக்கப்பட்ட பிறகு கேரளத்தில் ஒரு பய னாளிக்கு ரூ.11,300 சமூகநல ஓய்வூதிய மாக எல்டிஎப் அரசு வழங்கியது. இதை யெல்லாம் மூடிமறைக்கவும், விவாதங்கள் மூலம் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கும் ஒரு ஊடக-எதிர்க்கட்சி சதி ஏன் என்பதை இப்போது மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.  முதல்வர் பினராயி விஜயன் தனது அதி காரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள் ளார் அதில், “ஓணத்திற்கு முன்பே சமூக ஓய்வூதிய விநியோகம் தொடங்கியுள்ளது. மனிதர்களின் மனம் நிறைந்த இந்த சிரிப்பு தான் இந்த அரசின் ஆற்றல். அவர்களது ஆதரவு இந்த அரசின் அடித்தளமாக உள் ளது” என பாரு அம்மாவின் படத்துடன் மற் றொரு படத்தையும் தனது முகநூல் பக்கத் தில் பதிவிட்டுள்ளார். முதல்வரின் இந்த பதிவை ஒரு மணி நேரத்தில் 13 ஆயிரம் பேர் லைக்கும் 2,100 பேர் பகிரவும் செய்துள்ளனர். மன்னார்காடு ரூரல் சர்வீஸ் கூட்டுறவு வங்கி வழங்கிய சமூக நல ஓய்வூதியம் பெற்ற பாரு அம்மா வின் மகிழ்ச்சி இன்று கேரளத்தில் உள்ள ஏழை மக்களின் மகிழ்ச்சியுமாகும்.