திருவனந்தபுரம், மே 24- எதிர்கட்சியின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெற்று முன் னேறவே அரசு விரும்புகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். முதல்வரின் ‘நாம் முன்னோட்டு’ என்கிற வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறிய தாவது: நாட்டின் அனைத்து நல்ல செயல் களுக்கும் எதிர்க்கட்சி துணை நிற்கும் என்று எதிர்பார்க்கிறோம். அத்தகைய பிரச்சனைகளை அவர்களுடன் விவா திப்பதில் அரசுக்கு எந்தவொரு சிரம மும் இல்லை. எதிர்க்கட்சி நாட்டின் பகுதியாகும். நாட்டை செழிப்பாக்க வேண்டும் என்பதே அவர்களது நிலை பாடும். எதிர்க்கட்சி கேட்டுக்கொண்ட தன் அடிப்படையில்தான் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை விவாதத்துக்கு அழைப்பதில் யாருக்கும் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால், அழைப்பதற்கு விரும்பும் போதே அழைப்பதில் என்ன பயன் என்கிற எண்ணத்தை தோற்றுவிக்க கூடாது. எல்லாவற்றி லும் ஒரு எதிர்மறை நிலைப்பாடு எல்லா காலத்திலும் யாரும் மேற்கொள்ளக்கூடாது. எதிர் க்க வேண்டியவற்றை எதிர்க்க வேண்டும். அதை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். அதில் சரியானது என்றால் அரசு ஏற்கும். எதிர்க்கட்சியில் நியாயமாக சிந்திப்போர் ஏராளமானோர் உள்ளனர் என முதல்வர் கூறினார்.
பினராயிக்கு 75 ஆவது பிறந்தநாள்
ஞாயிறன்று (மே 24) பினராயி விஜயனின் 75ஆவது பிறந்தநாள் என் பதை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர், கோவிட் கொள் ளைநோய் காலத்தில் வரும் பிறந்த நாளுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை எனவும் நாடு எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனையைத்தான் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
கேரள முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.