திருவனந்தபுரம், ஆக.13- தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் தாக்குதல் கூடாது என வும், அது சைபர் தளமானாலும் ஊடக தளமானாலும் பொருந்தும் என்ப தே நிலைப்பாடு எனவும் கேரள முத ல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். லினியின் குடும்பம், கே.ஆர். மீரா, ஹனான், அமைச்சர் கே.கே.சை லஜா உள்ளிட்டோர் மீது காங்கிர ஸார் நடத்திய சைபர் தாக்குதல்க ளையும் அவர் பட்டியலிட்டார். அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்களை பார்த்தால் நமக்கு பல தும் நினைவுக்கு வரும். சைலஜா டீச்சர் தனது பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுபவர். அவரை நடன க்காரி என அழைத்தது கேபிசிசி தலைவர். டீச்சருக்கு மீடியா மானியா என்று கூறியவர் எதிர்கட்சி தலைவர். சமூக ஊடகங்களில் சைலஜா டீச்சரை அவமானப்படுத்தவும் பட ங்களை மார்பிங் செய்யவும் யுடிஎ ப்பின் சைபர் டீம் உருவாக்கி னார்களே. அளவற்ற மோசமான பதி வுகள் படங்களாக வெளியிடப்ப ட்டன. கடந்த மாதம் மேர்சிக்கு ட்டி அம்மாவை காங்கிரஸ், முஸ்லீ ம்லீக்கினர் கடுமையான வார்த்தைக ளால் அவமானப்டுத்தினர். ஆபாச வார்த்தைகளை அல்லவா அவர் எதிர்கொண்டார்.
ஏகேஜியை அவமதித்த எம்எல்ஏ
எழுத்தாளர் பெஞ்சமின் இணைய தாக்குதலுக்கு இரையாக்கப்ப ட்டாரே. அதற்கு தலைமை வகி த்தவர் காங்கிரஸின் ஒரு இளம் எம்எல்ஏ. சில தினங்களுக்கு முன்பு கே.ஆர்.மீராவை ஒரு இளம் காங்கி ரஸ் தலைவர் முகநூல் மூலம் அவ மானப்படுத்தினார். தனது சைபர் டீமை பயன்படுத்தி பின்னர் மீரா மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. அத்து மீறிய எம்எல்ஏ இதற்கு முன்பும் இது போன்று செய்தவர் தானே. உல கம் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் ஏகேஜியை அவம திப்பது மட்டுமல்லாமல், தனது குழுக்களை ஏ.கே.ஜி. அவமதிக்கு மாறு கூறியதை நாம் பார்த்தோமே. அன்று அதை கேபிசிசி தலைவர் விம ர்சித்தார். அப்போது அந்த தலைவரே அவரது அணிகளிடமிருந்து சைபர் தாக்குதல் எதிர்கொண்டார். முகநூலில் ஆபாச வார்த்தைக ளால் தன்னை காங்கிரஸ் மூத்த தலை வர் அவமதித்ததாக ஒரு பெண் புகார் அளித்தார். மற்றொரு இளம் காங்கி ரஸ் எம்.எல்.ஏவும் அதை நியாய ப்படுத்த முன்வந்தார். கடைசியாக அவர் வசைபாடத் தொடங்கினார். அவரது பதிவின் மீது கருத்து தெரி வித்த பெண்களையும் வசைபாடி னார். அதன்பிறகே ஹனான் என்கிற பெண் உச்சகட்ட மோசமான ஆபாச வசைபாடலுக்கு இரையானார். அவர் எதிர்கட்சி தலைவரை விமர்சி த்துவிட்டார் என்பதே அவர் செய்த குற்றம்.
ஊடகத்தினர் மீதும் தாக்குதல்
நிபாவுக்கு எதிரான போரா ட்டத்தில் உயிர் தியாகம் செய்த சகோ தரி (செவிலியர்) லினியின் குடு ம்பத்தை சமூக ஊடகங்களிலும் அத ற்கு வெளியேயும் வேட்டையாடும் முயற்சி மறந்து விட்டதா. லினி யின் கணவர் வேலை பார்க்கும் அலுவலகத்துக்கு பேரணி நடத்த ப்பட்டதல்லவா. ஊடகவியலாளர்க ளின் நிலை என்ன?. நியூஸ் 18 செய்தி தொகுப்பாளர் சைபர் குழுவால் ஆபாச வார்த்தைகளால் அவமதிக்க ப்பட்டார். பின்னர் பிரைம் டைம் நியூ ஸிலிருந்து அந்த தொகுப்பாளர் வில க்கப்படும் சூழ்நிலை ஏற்ப ட்டதே. ஏசியாநெட்டின் ஒரு தொகு ப்பாளருக்கு எதிரான செய்திகளும் மிரட்டலும் காங்கிரஸ் முகநூல் பக்க த்தில் வந்ததே? அதையொட்டி சிலர் கைது செய்யப்பட்டார்கள். அவ ர்களை சிறையில் சென்று சிலர் சந்தி த்ததையும் பார்க்க முடிந்ததே. மனோரமா டிவி தொகுப்பா ளருக்கு எதிராகவும் சைபர் தாக்கு தல் நடந்தது. எத்தனை ஊடகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. எந்த பிரிவினர் அதற்கு எதிரான விவாதம் நடத்த முன்வந்தனர்?. இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏற்கனவே நான் சுட்டி க்காட்னேன். இவ்வாறு ஆபாச மழை பொழிவது எதிர்கட்சி அணிகள். சமூக ஊடகங்களில் பணிவுடன் தொ டர்பு கொள்ள உங்கள் அணிகளி டம் இல்லையென்றாலும் தலை வர்களிடமாவது நீங்கள் கூற வேண்டும்.
இல்லாத இஸ்ரோ ஊழல்
தங்க கடத்தல் வழக்கில் குற்றவா ளியாக சேர்க்கப்பட்ட சந்தீப் சிபிஎம் ஊழியர் என முதலில் செய்தி வழங்கி யது இங்குள்ள ஒரு முக்கிய ஊடகம். ஒரு கட்டத்தில் கொடியேரி பாலகி ருஷ்ணன் அதை தெளிவுபடுத்தியது உங்களுக்கு நினைவில்லையா? தேர்தலின் போது பிளாக் பஞ்சா யத்துக்காக போட்டியிட்ட காங்கிரஸ் தலைவரின் தலைமுடியை சிபிஎம் ஊழியர்கள் வெட்டியதாக ஒரு நாளி தழ் முதல் பக்க செய்தி வெளியிட்டது. பின்னர் அந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்த பிற கும் மன்னிப்பு கோரவோ, திருத்த வோ அந்த நாளிதழ் முன்வரவில்லை. காங்கிரசின் கோஷ்டி மோ தலைத் தொடர்ந்துதான் இஸ்ரோ ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து அவர் (நம்பி நாராயணன்) நேற்று ஒரு தொலைக்காட்சியில் கூறி யதை நீங்களும் கேட்டதுதானே. இது போன்ற ஏராளமானவை உள்ளன. இன்றைய நிலையில் ஆலோசனை மேற்கொண்டு செய்யத்தக்கது என்ன என்பதே முக்கியமானது. அது குறித்து நீங்கள் கேட்கலாம், அதற்கு விளக்கமும் தரலாம். நாம் அந்த நிலைக்கு செல்வதே நல்லது என்று முதல்வர் கூறினார்.