tamilnadu

img

கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோய் தொற்றை தடுப்பது முக்கியம்: கே.கே.சைலஜா

திருவனந்தபுரம், மே 25- வெளியிலிருந்து வருவோர் அதிக ரிப்பதற்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கை  அதிகரிக்கும். ஆனால், அவர்களிடமிருந்து தொற்று ஏற்படாமல் தடுப்பது முக்கியமா னது. அதற்கான முன் எச்சரிக்கை தேவை.  கண்காணிப்பில் உள்ள நபர்கள் குறித்து அரசு  அளித்துள்ள உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் நோய்தொற்று வராமல் தடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கோவிட் நோய் தொற்று குறித்து திருவ னந்தபுரத்தில் ஞாயிறன்று செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: வெளியிலிருந்து வந்துள்ள நோயாளிகளை துல்லியமாக நிர்வ கிக்க முடியும். ஆனால் அவர்கள் முறையாக  தனிமைக்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உயிரிழப்பை குறைப்பது என்பதே  அரசின் இலக்கு. தொடர்புகள் மூலம் நோய் ஏற்படுகிறது. சுகாதார ஊழியர்கள் உட்பட நோய் தொற்றுக்கு உள்ளாகிறார்கள்.

இது சற்று அச்சத்தை ஏற்படுத்தினாலும் சுகாதார ஊழியர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்றுக்கு உள்ளாகும் சுகாதார ஊழியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். முன்னறிவிப்பு இல்லாமல் வெளியிடங்க ளில் இருந்து நபர்கள் வந்தால் ஏற்படும் பிரச்ச னைகள் அளவிட முடியாதது. அனைவரும்  கேரளத்துக்கு வரலாம் என அரசு தெரி வித்துள்ளது. அதற்காக, முன்னறிவிப்பு இல்லாமல் இந்த நேரத்தில் வந்தால் எங்கி ருந்து வருகிறார்கள் என்பது தெரியாமல்  சிரமம் ஏற்படும். அவர்கள் யார் என்பதை  கண்டுபிடிப்பதும் கடினமாகும். அது வரு கிறவருக்கும் இங்கு உள்ளவர்களுக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் பதிவு செய்யுமாறு கூறப்பட்டது. அப்படி செய்தால் புரிந்துகொண்டு தலை யிட முடியும். கண்ணூரில் நடந்தது ஆபத்தான  செயல். சில அமைப்பினர் அவர்களை நக ரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். நமக்கு  எந்த ஒரு தகவலும் இல்லை. விவரம் அறிந்ததும் கண்ணூர் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு நிலைமையை சீராக்கியுள்ளார். இந்த  நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என அமைச்சர் கூறினார்.