tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 1167 பேருக்கு கோவிட் தொடர்புத் தொற்று 888; குணமடைந்தது 679 பேர்

திருவனந்தபுரம், ஜூலை 29- கேரளத்தில் செவ்வாயன்று 1167 பேருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. தொடர்பு மூலம் 888 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதில் 55 பேருக்கு நோய் தொற்றிடம் தெரியவில்லை என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். திருவனந்தபுரத்தில் திங்களன்று கோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்க ளை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: செவ்வாயன்று கோவிட் உறுதி செய்யப் பட்டதில் 122 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 96 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்த வர்கள். சுகாதார ஊழியர்கள் 33 பேர். நோய்  பாதித்து சிகிச்சையில் இருந்த 679 பேர் குண மடைந்தனர். 4 கோவிட் நோயாளிகள் உயிரி ழந்தனர். கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் 1,50,716 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19,140 பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. இதுவரை 3,62,210 பரிசோதனை கள் நடந்துள்ளன. இதில் 6,596 பேரின் பரிசோ தனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இது தவிர சுகாதாரத் துறையினர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்க முள்ள முன்னுரிமை பிரிவினரில் 1,16,418 பேரி டம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1,13, 073 பேருக்கு நோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டள்ளது. தற்போது 486 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக முதல்வர் கூறினார்.