tamilnadu

img

எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது போலி செய்திகளால் கவலை இல்லை: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஆக.9- எல்.டி.எப் அரசை அரசியல் ரீதி யாக எதிர்கொள்ள முடியாதவர்கள் சில சதிகளின் மூலம் முயற்சி செய்கி றார்கள். எல்.டி.எப் அரசுக்கு பெரும் புகழ் கிடைக்கிறது. இது சிலருக்கு எரிச்சல் ஊட்டுகிறது. அது ஒரு அர சியல் விசயம். ஆனால் எல்.டி.எப்பை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள அவர்களால் முடிய வில்லை என்று கேரள முதல்வர் பின ராயி விஜயன் கூறினார். சனியன்று செய்தியாளர் கேள் விக்கு பதிலளித்து அவர் மேலும் கூறியதாவது: அரசியல் ரீதியாக எல்டிஎப் அரசை எதிர்கொள்ள முடி யாதவர்கள் சில சதிகளின் மூலம் அதற்கான முயற்சியை நடத்தி வரு கிறார்கள். அதில் பல வழிகளை பின்பற்றுகிறார்கள். இன்று எவ் வாறு அவதூறு செய்வது என்ப தற்கு நிபுணத்துவம் பயன்படுத்தப் படுகிறது. அதோடு இணைந்து கொள்ள சில ஊடகங்களும் தயா ராகி உள்ளன. இந்த அரசு முந்தைய அரசைப் போன்றது என்றும், இன்றைய முதல் வர் என்றால் முந்தைய முதல்வரைப் போல் தான் என்கிற முறையிலும், இன்றைய முதல்வர் அலுவலகம் என்றால் முந்தைய முதல்வர் அலு வலகம் போல் தான் என்றும், இன் றைய முதல்வர் இல்லம் முந்தைய முதல்வரைப் போன்றது தான் என் றெல்லாம் சித்தரிப்பது எதற்காக. தெளிவான அரசியல் சதியின் பகுதி யாக சில ஊடகங்களும் இணைந் துள்ளன.

தங்க கடத்தல் பிரச்சனை வந்த முதல் நாளில் ‘முதல்வரின் அலுவலகத்துக்கு தொடர்பு, தங்கத்தை விடுவிக்க முதல்வரின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு’ என்பதாக அல்லவா செய்தி வந்தது. என்ன ஆதாரத்தின் அடிப்ப டையில் அவ்வாறு கூறப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார்.  ஊடகச் செய்திகளுடன் மக்கள் நிற்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். மக்கள் அனைத்து பிரச்சனைகளையும் சரியாக மதிப் பீடு செய்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் போலிச் செய்திகள் ஊட கங்களில் வரும் போதும், வேண்டு மென்றே தவறானவற்றை சித்தரிக்க முயற்சிக்கும் போதும் அதில் எந்த கவலையும் இல்லை என்று முதல் வர் கூறினார்.


உயிருடன் உள்ள சிறுமி இறந்ததாக பிரேக்கிங் நியூஸ்தவறை சுட்டிக்காட்டியும் திருத்(ந்)தாத மலையாள மனோரமா

திருவனந்தபுரம், ஆக.9- பரபரப்பு செய்திகளை முந்தி தரு வதில் தொலைக்காட்சி செய்திக ளுக்கு இடையே நடக்கும் போட்டியில் உண்மையைப் பற்றி அக்கறையின்றி பொய்களை வலிந்து கூறுவது கரிப் பூர் விமான விபத்திலும் தெளிவாகி உள்ளது. ஆனால் தவறு அம்பலமான போதும் அதை திருத்த முன்வராதது சம்பந்தப்பட்டவர்களுக்கு கவலை அளித்துள்ளது.  வெள்ளியன்று கரிப்பூர் (கோழிக் கோடு) விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் லேசான காயத்து டன் அயனா ரவிசங்கர் (4) என்கிற குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த குழந்தை இறந்து விட்ட தாக மனோரமா செய்தி சானல், பிரேக் கிங் நியூஸ் ஒளிபரப்பியது. அதுவும் மரணம் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறி வித்த பிறகு இந்த ‘பிரேக்கிங்’ ஒளி பரப்பானது.

40 பேருக்கு கோவிட்: மாத்ருபூமி
‘விமானத்தில் வந்த 40 பயணி களுக்கு கோவிட்’ என்பது மாத்ருபூமி டிவி அளித்த ‘அதிர்ச்சி’ செய்தி. ஆனால் விமானத்தில் வந்தவர்களில் ஒருவரிடம் மட்டுமே கோவிட் தொற்று உறுதியானது. அந்த பொய் செய்தி மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டவர்களுக்கு கவலை அளிக்கும் என்பது அந்த சானலுக்கு ஒரு பொருட்டே இல்லை.  விபத்து நடந்த வெள்ளியன்று இரவு தகவல்களை தருவதில் சானல் களுக்கு இடையே கடும் போட்டி காணப்பட்டது. இந்நிலையில் மீடியா ஒன் டி.வி சுகாதாரத்துறை அமைச் சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடுத்த பேட்டியை ஒளி பரப்பியது. மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கும் போது மீடியா ஒன் எழுப்பிய கேள்வி இது, “விமானத் தில் இருந்த குடும்பங்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிதறிக் கிடக்கிறார்கள், ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்காததில் அரசின் அலட்சி யம் உள்ளதா?. திடீரென நடக்கும் மீட்பு பணிகளில் ஏற்படும் சிரமங்கள் குறித்து குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத கேள்விகள் இவை. இவற் றுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.  பருவகால பாதிப்புகள் குறித்த செய்திகளை கூறும்போதும் மனோ ரமா டிவி ஆவேசத்துடன் பொய்களை ஒளிபரப்பியது. ‘கேரளத்தில் 5 அணை கள் உடைப்பு’ என அதன் தொகுப்பா ளர் நிஷா புருஷோத்தம் கூறினார்.

நலமுடன் உள்ளனர்
ரவிசங்கரின் நான்கு வயது மகள் அயனா இறந்து விட்டார் என்ற போலி செய்தி யை மனோரமா மற்றும் ஏசியானெட் சேனல்கள் சரி செய்யவில்லை. குழந்தை இறந்து கிடப்பதாக தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தாய் தந்தையர் பெரிந்தால் மன்னா மருத்துவமனையிலும், அயனா கோழிக்கோடு பேபி நினைவு மருத்துவமனை யிலும் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை நலமுடன் இருப்பதை உறுதி செய்து கொண்ட உறவினர்கள் தொலைக்காட்சியின் கோழிக்கோடு அலுவலகத்தை அழைத்து குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.  பட்டாம்பி காவல்துறையினரும் தொலைக்காட்சி அலுவலகத்தை அழைத்து குழந்தை இறந்து விடவில்லை என்று தெரிவித்ததாகவும், ஆனால் அதை சரிசெய்ய அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலை யில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட பாலக்காடு தவிர மலையாள மனோரமாவின் அனைத்து பதிப்புகளிலும் குழந்தை இறந்ததாகவே செய்தி வந்தது. விமானத்தில் மூதூதலாவைச் சேர்ந்த ரவிசங்கர், மனைவி தாரா, மகள் அயனா ஆகியோருடன் சகோதரன் பரமேஸ்வரனும் வந்தனர். பரமேஸ்வரனின் திருமணம் செப்டம்பர் 10 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் துபாயிலிருந்து கேரளம் திரும்பினர். அயனாவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது தவிர அனைவரும் நலமுடன் உள்ளனர்.