tamilnadu

img

கோவிட் பரிசோதனைகள் அதிவிரைவாக நடத்த கோழிக்கோட்டில் ஆர்டிபிசிஆர் ஆய்வகம் திறப்பு

திருவனந்தபுரம்:
கோழிக்கோடு பிராந்திய பொது சுகாதார ஆய்வகத்தில் கோவிட்-19 பரிசோதனைக்கான ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா திறந்து வைத்தார். மலப்புரம் சுகாதாரத் துறையின் பயிற்சி மைய கட்டிடத்தில் இந்த ஆய்வகம் அமைக்கப் பட்டுள்ளது.கோழிக்கோட்டில் மற்றொரு ஆர்டிபிசிஆர் ஆய்வகம் அமைக்கப்படுவதால், விரைவில் இந்த பகுதியில் கோவிட் சோதனைகளை நடத்த முடியும் என்று அமைச்சர்கூறினார். ஆரம்பத்தில் ஆலப்புழா என்.ஐ.வி.யில் மட்டுமே கிடைத்த கோவிட் சோதனை முறை இப்போது மாநிலம் முழுவதும் கிடைக்கிறது. தற்போது, 23 அரசுஆய்வகங்கள் மற்றும் 10 தனியார் ஆய்வகங்கள் உட்பட 33 இடங்களில் கோவிட் -19 ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்கான அமைப்புகள் உள்ளன.

மேலும், சுமார் 800 அரசு ஆய்வகங்களிலும் சுமார் 300 தனியார் ஆய்வகங்களிலும் ஆன்டிஜென், எக்ஸ்பர்ட்/ சிபினாட், ட்ரூநாட் சோதனைகள் செய்யப்படுகின்றன. ஆய்வு முறையை மேலும்அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். அதிநவீன சோதனை வசதிகளுடன் கூடிய கோழிக்கோடு பிராந்திய பொது சுகாதாரஆய்வக கட்டிடம் விரைவில் திறக்கப்படும்.புறநோயாளிகள், உள்நோயாளிகள் என்கிற வேறுபாடு இல்லாமல் பொது சுகாதார ஆய்வகத்தின் சேவைகள் கிடைக்கும்.வறுமைக்கோடுக்கு (பிபிஎல்) கீழ்உள்ளோருக்கு அனைத்து சோதனைகளும்இலவசமாக செய்து தரப்படும். வறுமைக்கோடுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். பொதுசுகாதார ஆய்வகங்கள் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் சஷிந்திரா கலந்துகொண்டார். கோழிக்கோடு மாநகராட்சி மேயர் தொட்டத்தில் ரவீந்திரன், மாவட்ட ஆட்சியர் சாம்பா சிவராவ், மாவட்ட மருத்துவ அலுவலர் வி. ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;