திருவனந்தபுரம், ஆக.5- கேரளத்தில் செவ்வாயன்று 1083 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய் யப்பட்டது. தொடர்பு மூலம் 902 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் நோய் தொற்றிடம் தெரியாத 71 பேர் உள்ளனர். கேரள சுகாதாரத்துறை செவ்வாயன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளதாவது: தொற்று ஏற்பட்டதில் 51 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 64 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்த வர்கள். 16 சுகாதார ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாயினர். இதுவரை 16,303 பேர் குண மடைந்துள்ளனர். தற்போது 11,540 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 1,45,062 பேர் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் 1,34,140 பேர் வீடுகள்/ நிறுவனங்களிலும், 10,922 பேர் மருத்துவமனைகளிலும் உள்ள னர். செவ்வாயன்று 1241 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாயன்று காலை வரை 24 மணி நேரத்தில் 20,087 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 8,58,960 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் 7595 முடிவுகள் நிலுவையில் உள்ளன. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழி லாளர்கள், சமூக ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,28,962 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 1522 பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன. செவ்வா யன்று 13 புதிய கட்டுப்பாட்டு பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) உருவாயின. 10 பகுதிகள் கட்டுப் பாடுகளிலிருந்து விலக்கப்பட்டன. தற்போது மாநிலம் முழுவதும் 509 பட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.