tamilnadu

கேரளத்தில் ஒரே நாளில் 1038 பேருக்கு கோவிட் இதுவரை நோய் தொற்றுக்கு உள்ளானோர் 15,032

திருவனந்தபுரம், ஜுலை 23- கேரளத்தில் புதனன்று 1038 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப் பட்டது. 785 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 57 பேருக்கு கோவிட் தொற்றிடம் தெரியாது. இதுவரை 15,032 பேர் பாதிப்புக்குள்ளானதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  புதனன்று கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம்  மேலும் கூறியதாவது: ஒரே நாளில் நோய் பாதிப்பு க்கு உள்ளானவர்களின் அதிகபட்ச எண் ணிக்கை புதனன்று  1038 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் 272. வெளிநாடுகளில் இருந்து கேரளத்துக்கு வந்தோர் 87, இதர மாநிலங்களில்  இருந்து வந்தோர் 109.  புதனன்று காலை வரையிலான  24 மணி நேரத்தில் 20,847 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுவரை 3,18,644 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளன. இதில் 8320 மாதிரிகளின் முடிவுகள் நிலுவையில் உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினரின் 1,03,951 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 99,499 மாதிரி கள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன. திருவனந்தபுரத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தொற்று ஏற்பட்ட 226 பேரில் 190 பேருக்கு தொடர்பு மூலம் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 15 பேரது நோய் தொற்றிடம் தெரியாது. 18 சுகாதார ஊழியர்களிடம் நோய் கண்டறியப் பட்டுள்ளது என்றார்.