tamilnadu

img

முதலில் பாசிட்டிவ்... அடுத்து நெகட்டிவ்... முடிவு தெரியாத "கொரோனா" மரணம்

கொல்கத்தா: 
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ், (68). இவர் ஏப்ரல் 22-ஆம் தேதி பங்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஓம்பிரகாஷுக்கு கொரோனா இருப்பதாகவும் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் அடுத்த நாளே ஓம்பிரகாஷுக்கு கொரோனா இல்லை, சோதனையில் நெகட்டிவ் என்று வந்து விட்டது என்று அவரை விடுவித்து அறிக்கையில் கொரோனா நெகட்டிவ் என்று மருத்துவர்கள் எழுதியுள்ளனர். ஆனால் ஓம்பிரகாஷ் உயிரிழந்து விட்டார்.இது குறித்து அவரது மகன் ராஜ்குப்தா கூறுகையில், "கொரோனா இல்லை என்று கூறியவர் எப்படி இறப்பார்? மருத்துவர்களின் அலட்சியமே காரணம். எனது தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார். இது ஏன் நடந்தது என்பது குறித்து பங்கூர் மருத்துவமனை மற்றும் சுகாதார அமைச்சக உயரதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம். அவர்கள்  எங்களுக்கு பதிலளிக்க வேண்டும். எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்"என்றார்.

தன்னுடைய தந்தையுடன் நடந்த கடைசி உரையாடலை மகன் ராஜ்குப்தா செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மேற்குவங்க சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் அவரது  மனைவி, அவரது மகன் மற்றும் மருமகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் ஆகியோர் மே 3-ஆம் தேதி கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.