திருவனந்தபுரம், ஏப்.8- பொது சேவைகளிலும் நிர்வாகத்தி லும் அதிகளவில் முதலீடு செய்யும் மாநி லங்களால் தொற்றுநோய் அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டால், அவற்றை திறம்பட எதிர்கொள்ள முடி யும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் தலையங்கம் தீ்ட்டி யுள்ளது. “மேஜர் பைட்டர்ஸ்” என்ற தலைப்பிலான இந்த தலையங்கம் முக்கி யமாக கேரள மாநிலம் கொரோனா எதிர் கொள்ளும் விதம் பற்றியதாகும். பெருவெள்ளம் மற்றும் பேரழிவுகளு டன் நிபாவையும் சமாளித்த கேரளம் கொரோனாவை வென்று வருவதாக அந்த நாளிதழ் மதிப்பீடு செய்துள்ளது.
நெருக்கடியான காலகட்டத்தை கையாள்வதில் முதல்வர் பினராயி விஜ யனின் அனுபவத்தையும், அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை யும் தலையங்கம் குறிப்பாக சுட்டிக் காட்டியுள்ளது. பினராயி மற்ற முதல மைச்சர்களிலிருந்து பொதுமக்களுட னான நேரடி தொடர்பில் தனித்து விளங் குவதாக தெரிவித்துள்ளது.
கேரளா கொரோனாவைக் கட்டுப் படுத்தத் தொடங்கியுள்ளது என்று பிற தேசிய ஊடகங்கள் கூறுகின்றன. நாட் டின் முதல் கொரோனா அறிவிப்பு ஜன வரி 30 அன்று கேரளத்தில் தெரிவிக்கப் பட்டது. பிப்ரவரி தொடக்கத்தில் மேலும் 2 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அதன்பிறகு புதிய நோயாளிகள் மார்ச் மாதத்தில் வருகின்றன. மார்ச் 20 அன்று மட்டும் 28 ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆனது. 21 இல் இந்த எண்ணிக்கை 50ஐ கடந்தது. மார்ச் 24இல் 100, 27இல் 150, 29இல் 200, ஏப்ரல் 4 ஆம் தேதி 300 நோயாளிகள். பெரும்பாலான நாட்களில் தினமும் 15 முதல் 40 என்கிற விகிதாச்சாரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
ஏப்ரல் தொடக்கத்திலேயே நிலை மையில் மாற்றம் ஏற்பட்டது. 70க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து விடுபட்ட னர். கடந்த 5 நாட்களாக புதிய நோயா ளிகள் 2 முதல் 4 சதவிகிதமாக குறைந் துள்ளது. மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை புதிய நோயாளிகள் அளவுக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ உள்ளது. செவ்வாயன்று 9 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டபோது, 12 பேர் நோயி லிருந்து விடுபட்டனர். மார்ச் 30 ஆம் தேதி நிலவரப்படி, நாட்டிலேயே அதிக நோயாளிகள் கேர ளத்தில் இருந்தனர். மார்ச் 31 ம் தேதி மகா ராஷ்டிராவில் இருந்து அதிக நோயாளி கள் பதிவாகினர். பின்னர், தமிழகம், தில்லி, தெலுங்கானா ஆகியவை கேரளாவை முந்தின. ஆந்திரா, ராஜஸ் தான் மற்றும் உ.பி. மாநிலங்கள் நோயா ளிகளின் எண்ணிக்கையில் கேரளா அள வுக்கு உயர்ந்தன.