திருவனந்தபுரம், ஜூலை 25- அரசுக்கு எதிராக அனைத்து வாய்ப்பு களையும் பயன்படுத்துவதில் காங்கிரசும் பாஜகவும் ஒரே குரலில் பேசுவதாகவும், ஆர்எஸ்எஸ்-க்கு பிடித்தமான தலைவராக எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மாறி விட்டதாகவும் கொடியேரி பால கிருஷ்ணன் கூறினார். யுடிஎப் தலைமைக்கு உம்மன்சாண்டியும் குஞ்ஞாலிக்குட்டியும் அல்லாத ஒருவர் வர வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்-இன் எண்ணம். ஆதற்கேற்ப அனைத்து வகையி லும் அவருக்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். திருவனந்தபுரத்தில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது: பல மாநிலங்களிலும் பாஜகவும் காங்கிரசும் ஒத்துப் போகவில்லை என்றாலும் கேரளத்தில் ஒத்த கருத்துடன் செயல்படு கின்றன. இங்கே காங்கிரசை எதிர்க்க ஆர்எஸ்எஸ் பாஜக தயாரில்லை. பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரசும் இல்லை. சில மாநி லங்களில் காங்கிரஸ் அரசுகளை பாஜக கவிழ்த்தது. ஆனாலும் காலையில் பாஜக தலைவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறும் குற்றச்சாட்டுகளை மதியம் சென்னித்தலா ஏற்றுக் கொண்டு பேட்டியளிக்கிறார். ஆர்எஸ்எஸ் விரும்புவதை செயல் படுத்தும் எதிர்க்கட்சியாக யுடிஎப் முத்திரை பதித்துள்ளது. அரசுக்கு எதிராக இரு அமைப்புகளும் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துகின்றன. ஒரு பொய்யை ஆயிரம் முறை திரும்பத் திரும்ப சொல்வது தான் கோயபல்சை பயன்படுத்தி ஹிட்லர் செய்த தந்திரம். ஆனால் பாஜகவும் காங்கிரசும் செய்வது ஆயிரம் பொய்களை ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்வதாகும். எதிர்க்கட்சி எத்தனை விவாதங்களை கிளப்பினாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்றத்துக்கான செயல்களில் கவனம் செலுத்த அரசு முயற்சிக்க வேண் டும். எதிர்க்கட்சிகள் கிளப்பும் பிரச்சனைகள் அவர்களுக்கே எதிராக திரும்பும் எனவும் கொடியேரி தெரிவித்தார்.