கொச்சி, ஏப். 5- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசை பாராட்டிய சசிதரூர் எம்பி, கேரள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பிரதமர் முன்மாதிரியாக கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். மாத்ருபூமி செய்தி சேனலில் ‘சூப்பர் பிரைம் டைம்’ பங்கேற்ற அவர் மேலும் கூறுகையில், கேரளத்தில் காட்டப்படும் வெளிப்படைத்தன்மையை பிரதமர் காட்ட வேண்டும். இங்கே எடுக்கப்படும் தற்காப்பு பணிகளை பெருமையுடன் சுட்டிக்காட்ட முடிவும் எனவும் சசிதரூர் கூறினார். நாடு நெருக்கடியான காலகட்டத்தை கடந்து செல்லும்போது தப்பு அடிக்கவும், விளக்கு கொளுத்தவும் கூறுவதையா ஒரு பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.