tamilnadu

img

தானியங்கி சானிடைசர் இயந்திரம் கேரள அரசு ஏற்பாடு

 திருவனந்தபுரம், மே 21- கோவிட் 19 வைரஸ் பரவாமல் தடுக்க கேரள அரசு துவக்கிய ‘பிளாக் தி செயின்’ இயக்க இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதி யாக தானியங்கி சானிடைசர் இயந்தி ரத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள் ளது.  தொடாமலே சானிட்டைசர் (கைகழு வும் திரவம்) வழங்கும் ‘சானிடைசர் டிஸ்பென்சர்’ என்கிற இயந்திரத்தை கேரள அரசு தயாரித்துள்ளது. இந்த இயந் திரத்தை சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இயக்கி வைத்தார். சுகா தாரத்துறை, சமூக நீதித்துறை, பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புத் துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கம் ஆகியவை இணைந்து பல்வேறு இடங்களில் தானி யங்கி சானிடைசர் இயந்திரத்தை அமைக்க உள்ளன.