tamilnadu

img

அக்ரகாரங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே.. ஆனால், சாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறையற்றது

கொச்சி:
கேரள மாநிலம் கொச்சியில், தமிழ்பிராமணர்களின் 3 நாள் உலகளாவிய மாநாடு அண்மையில் நடை பெற்றுள்ளது. இதில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்கும் சிதம்பரேஷ் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது, விஷமத்தனமாகவும், பிராமணிய ஆதிக்க மனோபாவத்துடனும் பல்வேறு விஷயங்களை வெளிப் படுத்தியுள்ளார். அவர் பேசியிருக்கும் கருத்துக்கள் வருமாறு:

“சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது தேவையற்றது என்பதுடன் அது முறையற்றது என்று சொல்லவிரும்புகிறேன். இடஒதுக்கீடு சமூகஅடிப்படையில் அமைய வேண்டுமா; அல்லது வெறுமனே சாதி அடிப்படையில் மட்டும் அமைய வேண்டுமா? என்பதை பிராமணர்கள் சிந்திக்க வேண்டியநேரம் இதுவாகும். நான் அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருப்பதால்,இதுசார்ந்து எந்த கருத்தையும் பகிரங்கமாக தெரிவிக்க முடியாது.பிராமணன் என்பவன், இரு பிறப்புகொண்டன். சுத்தமான பழக்க வழக்கங்கள், உயர்ந்த சிந்தனை, உத்தமமான பழக்க வழக்கம், சைவ உணவுப் பழக்கம், கர்நாடக இசையை விரும்பு வது உள்ளிட்ட அனைத்து மேலான பழக்கங்களையும் கொண்டவனே ஒரு பிராமணன்.அந்த வகையில், பிராமணர்கள் வாழும் அக்ரகாரப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கே சிறந்தகலாச்சார பாரம்பரியம் உள்ளது. பிராமணர்கள் தவிர, வேறு யாரும் அங்கேகுடியமர்த்தப்படக் கூடாது.இவ்வாறு சிதம்பரேஷ் பேசியுள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு, சிதம்பரேஷ் வெளிப்படுத்தியுள்ள இந்த கருத்துக்களுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

;