tamilnadu

img

‘ஆர்எஸ்எஸ்க்கு எதிரான அடூரின் பதில் கேரளத்தின் பதிலாகும்’ : கொடியேரி பாலகிருஷ்ணன்

திருவனந்தபுரம்:
மிரட்டல் விடுத்த பாஜகதலைவருக்கு அடூர் கோபால கிருஷ்ணன் அளித்த பதில் கேரளத்தின் பதிலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார். ‘நீங்கள் டிக்கெட் எடுத்துத் தந்தால் நான் சந்தி ரனுக்குப் போகிறேன்’ என்று சொல்வதற்கான துணிவை அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியது கேரளமாகும் என்றார்.‘ஜெய் ஸ்ரீராம் கோஷம்கேட்கப் பிடிக்கவில்லை யென்றால் ஸ்ரீஹரிகோட்டாவில் பெயர் பதிவுசெய்து  சந்திர னுக்குப் போகலாம்’ என்று கேரளத்தில் அடூர் கோபால கிருஷ்ணனுக்கு பாஜக மாநிலத் தலைவர் மிரட்டல் விடுத்தபோது, ‘டிக்கெட் எடுத்துத் தந்தால் நான் சந்திரனுக்குப் போகத் தயார்’ என்று பதிலடிக் கொடுத்திருந்தார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
இந்நிலையில், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராகசங்பரிவார் விடுத்த மிரட்டலைஎதிர்த்து கேரள அரசுத் தலை மைச் செயலக ஊழியர்கள் சங்கத்தின் கலாச்சாரப் பிரி வாகிய ‘ரசனை’ நடத்திய கண்டனச் சங்கமம் நிகழ்ச்சியை  துவக்கி வைத்துப் பேசுகையிலேயே கொடியேரி பாலகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.

“இந்தப் பூமியில் வாழ முடியாது என்று சங்பரிவார் அடூருக்குக் கட்டளையிட்டது. நாளை இந்த மிரட்டல் மற்ற எவருக்கும் எதிராகவும் எழும். கேரளத்திலிருந்தா இத்தகையமிரட்டல் என்பதை நினைக்கிற போது வெட்கக் கேடாக உள்ளது. பாஜக தலைவர் கும்மனம்ராஜசேகரனும் இதை ஆத ரித்தது சரியானது அல்ல. இதுஆர்எஸ்எஸ் நிலைபாடு. ஆர்எஸ்எஸ்ஸின் கருத்துடன் முரண்படுகிறவர்களுக்கு இனி வாழமுடியாது” என்கிற நிலை.கேரளம் பல்வேறு கருத்துக்களும் சிந்தனைகளும் கொண்டவர்கள் செயல்படுகிற மாநில மாகும். எத்தகைய கருத்து உள்ளவர்களும் வாழ்வதற்கும், கருத்துச் சொல்வதற்கும் இங்கேசுதந்திரம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் விதமாகத்தான், ஸ்ரீராமன் பெயரால் நடக்கும் கும்பல் கொலை
பாதகங்களை அடூர் கோபால கிருஷ்ணன் கண்டித்தார். இதை  சகித்துக் கொள்ள முடியாமல் ஆத்திரம் அடைகிறது ஆர்எஸ்எஸ். இவர்களின் சகிப் பின்மை கேரளத்தில் எடுபடாது” என்றார் கொடியேரி பால கிருஷ்ணன்.