tamilnadu

img

2 நாட்களில் 3.16 லட்சம் ஓணப் பைகள் விநியோகம்

திருவனந்தபுரம், ஆக.16- கோவிட் நெருக்கடிகளுக்கு இடையிலும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் கேரள அரசு அறிவித்த ஓணப்பைகள் வழங் கும் பணி தொடர்கிறது. ஏழை களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இரண்டே நாட்களில் 3,16,277 ஓணப்பைகள் வநியோ கம் செய்யப்பட்டுள்ளன. கோவிட் காரணமாக மிகவும் நெருக்க டிக்கு உள்ளாகி இருக்கும் மீன் தொழிலாளர்களுக்கு 10,146 பைகள் வழங்கப்பட்டன. கோவிட் கொள்ளை நோய் ஏற்படுத்திய நெருக்கடிகள் கேர ளத்தின் வருவாயில் பெரும் வீழ்ச்சி யை ஏற்படுத்தியது. ஆனால், இத் தனை இடர்பாடுகளுக்கு மத்தியி லும் ஒருவர் கூட ஓணக்காலத்தில் சிரமப்படக் கூடாது என்பது அர சின் நிலைப்பாடு. கோவிட் ஊர டங்கு காலத்திலும் இந்த அரவ ணைப்பை கேரள மக்கள் உணர்ந் தனர். இந்நிலையில் வியாழ னன்று 11 வகையான உணவுப் பொருட்கள் அடங்கிய ஓணப்பை கள் விநியோகம் துவக்கப்பட் டது. ரூ.500 மதிப்பிலான இந்த பை களில் ஒரு கிலோ சர்க்கரை, அரை கிலோ சிறுபயறு அல்லது பெரும் பயறு, ஒரு கிலோ வெல்லம், தலா 100 கிராம் மிளகாய், மஞ் சள், சாம்பார் தூள், அரை லிட்டர் தேங்காய் எண்ணெய், ஒரு கட்டு பப்படம், ஒரு பாக்கட் சேமியா அல்லது பாலடை, ஒரு கிலோ கோதுமை மாவு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 15 விடுமுறையைத் தொடர்ந்து ஞாயிறன்று மீண்டும் தொடங்கி யது. 88 லட்சம் குடும்பங்களுக்கு ஓணப்பை விநியோகிக்கும் பணி இம்மாதம் 27 இல் நிறைவடை யும்.