tamilnadu

img

14.54 கோடியில் அதிநவீன கதிர்வீச்சு இயந்திரம் ஆர்சிசி-யில் கே.கே.சைலஜா இயக்கி வைத்தார்

திருவனந்தபுரம், ஆக.20- திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் (ஆர்சிசி)  புதிதாக அமைக்கப்பட்ட அதிநவீன உயர் ஆற்றல் கொண்ட லீனியர் எக்சிலரேட்டர் என்கிற கதிரியக்க இயந்திரத்தையும் சிகிச்சை பிரிவையும் கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா திறந்து வைத்தார். ஆர்சிசி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.கே.சைலஜா பேசும்போது, கோவிட் காலத்தில்கூட புற்று நோயாளி களுக்கு சிறந்த வசதிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது என்றார். கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதி லுமிருந்து பலர் திருவனந்தபுரம் ஆர்சிசி யில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் கோவிட் காலத்தில், நீண்ட தூரம் பயணிக்காமல் அருகிலுள்ள பகுதிகளில் புற்றுநோய் சிகிச்சைபெற வசதிகள் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி உட்பட 23 இடங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்த காலகட்டத்தில் இந்த பகுதிகளில் புற்றுநோய் நோயாளிகளுக்கு மருந்து வாங்குவது கடினமாக இருந்தது. சுகாதாரத் துறை, காவல்துறை, தீயணைப்பு படையினர் அவர்களுக்கு இந்த சேவை கள் கிடைக்க உதவினர் என்றார்.

புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் நோய் கட்டுப்பாட்டிலும் அரசாங்கம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவ டிக்கைகளை ஒருங்கிணைக்க மாநிலத்தில் புதிய புற்றுநோய் பராமரிப்பு வாரியத்தை (கேன்சர் கேர் போர்டு) அமைக்க முடிவு செய்யப்பட்டது. திருவனந்த புரம் ஆர்சிசி, கொல்லம் ஆரம்பகால புற்றுநோய் கண்டறிதல் மையம், மலபார் புற்றுநோய் மையம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் புற்றுநோய் கட்டுப்பாட்டுக் கொள்கை வகுக்கப்பட்டது. அதோடு, ஒரு புற்றுநோய் பதிவு முறையும் தயாரிக்கப்படுகிறது. கொச்சி புற்றுநோய் மையம் செயல்படத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரிகளைத் தவிர, புற்றுநோய் சிகிச்சை மாவட்ட அளவிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார். புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன உயர் ஆற்றல் கொண்ட லீனியர் எக்சிலரேட்டர் கதிரியக்க இயந்திரம் பேருதவியாக இருக்கும். இந்த இயந்திரம் அரசின் முழு நிதியுதவியுடன் ரூ .14.54 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், இதனை பல்வேறு வகையான புற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான வெவ்வேறு அதிர்வெண்களின் எக்ஸ்ரே மற்றும் எலக்ட்ரான் கற்றைகளை துல்லியமாகப் பயன்படுத்த லாம். அருகிலுள்ள ஆரோக்கியமான உடல் திசுக்கள் மற்றும் பிற முக்கிய உறுப்புகளை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் திறனும் இந்த இயந்திரத்துக்கு உண்டு. சிகிச்சையை அதிகபட்ச துல்லியத்துடனும் குறைந்த பக்க விளைவுகளுடனும் மிக விரைவாக செய்ய முடியும் என்பது இதன் சிறப்பு. முழு டிஜிட்டல் இயங்குதளத்தில் செயல்படும் இந்த இயந்திரத்தின் மென்பொருள் சிக்கல்களை வெளிநாட்டில் இருந்துகொண்டே பொறியாளர்களால் சரி செய்ய முடியும். உயர்தர கதிர்வீச்சு சிகிச்சைக்காக இதை பயன்படுத்துவதன் மூலம், சிகிச்சைக்காக நோயாளிகளின் காத்திருப்பு கணிசமாகக் குறைக்கப் படலாம் எனவும் அமைச்சர் சைலஜா கூறினார். புதிய இயந்திரத்தின் வீடியோ விளக்கக்காட்சியும் நடந்தது. ஆர்சிசி இயக்குநர் டாக்டர். ரேகா எ நாயர் வர வேற்றார். ஏ. சஜீத் நன்றி கூறினார்.