tamilnadu

img

கேரளத்தில் ஒரே நாளில் 127 கோவிட் நோயாளிகள் வெளியில் இருந்து வந்தோர் 123;குணமடைந்தது 57 பேர்

திருவனந்தபுரம், ஜுன் 21- கேரளத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில்  சனியன்று 127 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் சனியன்று கோவிட்  ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியா ளர் சந்திப்பில் மேலும் கூறியதாவது: நோய் தொற்றுக்கு உள்ளான 127 பேரில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 36 பேர் இதர மாநிலங்களில் இருந்தும் கேரளத்துக்கு வந்த வர்கள். தொடர்புகள் மூலம் 3 பேருக்கும் சுகா தார ஊழியர் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் சனிக்கிழமையுடன் நான்கு  நாட்கள் கோவிட் நோயாளிகளின் எண்ணி க்கை நூறுக்கும் அதிகமாகி உள்ளது. தொற்று  ஏற்பட்ட இடம் அறிய முடியாத அளவுக்கு நோய் பரவுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்ப டுத்துவதாகும். திருவனந்தபுரம் நகரத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. பொதுமக்கள் தனிமனித இடைவெளி பின்பற்றுவதை உறு திப்படுத்த சிறப்பு காவல்துறையினர் நிய மிக்கப்படுவர். நிபாவில் இருந்து நோயாளிகளை பாது காப்பதற்கான போராட்டத்தில் தனது உயிரை  பலிகொடுத்தவர் சகோதரி லினி. அவரது கணவர் சஜீஷ் வேலை செய்யும் இடத்துக்கு  காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்திய செய்தியை காண முடிந்தது. உலகம் முழுவ தும் புகழப்பட்ட போராளிதான் லினி. நிபா வுக்கு எதிரான போராட்டத்திற்கு சாட்சி யமானவர் லினி. அவரது குடும்பத்தை வேட்டையாடாமல் இருந்திருக்கலாமே. வாழ்வின் நெருக்கடியான காலத்தில் உடனி ருந்தது யார் என அந்த இளைஞர் கூறினார் என்பதே காங்கிரஸின் வேட்டையாடலுக்கு காரணம். இதன் பேரில் லினியின் குடு ம்பத்தை வேட்டையாடுவதுதான் நோக்கம் என்றால் அதை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. சகோதரி லினி கேரளத்தின் சொத்து. அவரது பிஞ்சு குழந்தைகளுக்கும் சஜீஷ்-க்கும் இந்த நாடு- கேரளம் பாதுகாப்பு அளிக்கும் என்றார்.
3 பேர் மீது வழக்கு பதிவு
சகோதரி லினியின் கணவர் சஜீஷ் வேலை  செய்யும் சுகாதார நிலையத்துக்கு பேரணி சென்று தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சி யினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுகாதார ஆய்வாளரை தாக்கி யதாக மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் முனீர் எருவத், ஒன்றிய தலைவர் ராஜன் மரு தேரி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.