குஜராத்தில், கோவில் ஒன்றுக்குள் புகுந்த முதலை புகுந்தது. அந்த முதலையை பக்தர்கள் வழிப்பட தொடங்கியதால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கோடியார் மாதா கோவிலுக்குள் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று நேற்று இரவு நுழைந்தது. அந்த முதலை அம்மன் சிலைக்கு அருகில் இருந்ததால், அதனை பார்க்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த மக்கள் முதலைக்கு ஆரத்தி எடுத்தும், அதன் மீது குங்குமத்தை தூவியும் வழிப்பட தொடங்கிவிட்டனர். தகவலறிந்த வனத்துறையினர் அந்த முதலையை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அந்த பகுதியினரின் நம்பிக்கையின் படி கோடியார் மாதாவின் வாகனம் முதலை என்பதால், அந்த முதலையை மீட்கவிடாமல் வனத்துறையினருடன் பக்தர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரண்டு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின் முதலையை வனத்துறையினர் மீட்டனர்