tamilnadu

img

குஜராத்தில் நவம்பர் 23 ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

குஜராத் மாநிலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 9முதல் 12 ஆம் வகுப்பு வரை மீண்டும் திறப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. கொரோனா தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசின் எஸ்ஓபி விதிமுறைகளின் படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் தற்போது 12 ஆயிரத்து 456 கொரோனா தொற்றுகளும், 3 ஆயிரத்து 770 இறப்புகளை பதிவு செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஆந்திராவில் 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நவம்பர் 23 ஆம் தேதி மீண்டும் வகுப்புகளை தொடங்குகிறார்கள். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அக்டோபர் தொடக்கத்தில் திரிபுராவில் திறந்தவெளி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த வகுப்புகளில் 50 சதவிகிதம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.