tamilnadu

img

குஜராத்: கரடியின் ஆணுறுப்பை வெட்டி தின்றவர் கைது 

குஜராத்தில் கரடியின் ஆணுறுப்பை வெட்டி தின்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப்பகுதியிலுள்ள மாநிலங்களில் அழியும் நிலையிலுள்ள காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் யர்லென் மீது நிலுவையில் உள்ளன.  யர்லன் மத்தியப்பிரதேசத்திலுள்ள கன்ஹா தேசிய பூங்காவில் கடந்த 2013ஆம் ஆண்டு இரண்டு கரடிகள் அவற்றின் ஆணுப்புறுப்பு மற்றும் பித்தப்பை வெட்டி எடுக்கப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டார்.
ஓராண்டு சிறையில் கழித்த அவர், பிறகு பிணையில் விடுக்கப்பட்ட பின்பு அதே செயலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினரின் ஆறாண்டுகளாக யர்லனை தேடி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் குஜராத்தில் யர்லன் கைது செய்யப்பட்டுள்ளார். 
மத்திய இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடந்த புலிவேட்டையில் யர்லனுக்கு தொடர்பு உள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.