கிரிக்கெட்வீரர் தோனியின் மகளுக்கு இன்ஸ்டாகிராம் வழியாக பாலியல் மிரட்டல் விடுத்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிஎஸ்கே அணி தொடக்கத்தில் இருந்து சரிவை சந்தித்து வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7-ம் தேதி நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து ரசிகர் ஒருவர் தோனியின் மனைவி சாக்ஷிதோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் அவரின் வயது மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தார். அதில் தோனி ஐபிஎல் விளையாட்டில் ஒழுங்காக விளையாட வில்லை என்றால் தோனியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன்என்று பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.
இதையடுத்து சாக்ஷி தோனி சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் பதிவு எந்த சர்வர், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை ராஞ்சி சைபர் பிரிவு போலீஸார் ஆய்வு செய்தபோது குஜராத் மாநிலம், முந்த்ரா நகரிலிருந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்போன், ஐபிஎண்கள் உள்ளிட்ட விவரங்களை குஜராத் போலீஸாருக்கு ராஞ்சி போலீஸாருக்கு அனுப்பினர்.
இதையடுத்து குஜராத் காவல் துறையினர் செல்போன் எண்ணிற்குரிய முகவரியை கண்டறிந்து 16 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து சிறுவன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவன் விரைவில் ராஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.