குஜராத்தில் இன்று அதிகாலை லாரிகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தின், வதோதரா மாவட்டத்தில் வாகோடியா வட்டத்தில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சமஹால் மாவட்டத்தில் பாவகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக வதோதரா காவல் துணை ஆணையர் கரண்ராஜ் வாகேலா தெரிவித்தார்.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.