புதுதில்லி,செப்.27- இந்திய அளவில் சிறந்த சுற்றுலாத் தலமாக கீழடி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் சுற்றுலா தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவில் சிறந்த சுற்றுலா தளங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியாவில் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கீழடி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கட சுப்பிரமணியனிடம் வழங்கினார்