tamilnadu

காய்கறிகள் தேக்கம்; விவசாயிகள் கவலை

ஓசூர், ஜூலை 7- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தளப்பள்ளி காவல் நிலையம் அருகே மொத்த விற்பனை காய்கறி  சந்தையில் 600க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இங்கு 25 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களி லிருந்து தினசரி 500க்கும் மேற்பட்ட  விவசாயிகளும்,  200க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வணிகம் செய் கின்றனர். கொரோனா தொற்று துவங்குவதற்கு முன்பு  வரை கோயம்பேடு உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா. மஹாராஷ்டிரா  உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தினசரி 2 கோடி ரூபாய்  மதிப்பிலான காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படும். சந்தைக்கு தினசரி வரும் சாக்கு வியாபாரி ஒரு வருக்கு கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 6ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், பத்தலப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் கடைகளை  உடனடியாக அடைக்க நடவடிக்கை எடுத்தார். இதனால் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட பாதிக் கும் மேற்பட்ட காய்கறிகள் விற்பனையாகாமல் தேங்கி யுள்ளது. இதுகுறித்து காய்கறி சந்தை சங்கத்தின்  தலைவர் நாராயணப்பா கூறுகையில், காய்கறி ஏற்று மதி தடைபட்டால் காய்கறிகள் தேங்கி கடுமையான இழப்பு ஏற்படும். விவசாயிகளும் கடுமை யாக பாதிக்கப்படுவார்கள். எனவே ஓசூர் வட்டாட்டாட்சி  யர், சாராட்சியர், வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையர் உடனடியாக வந்து சந்தையை பார்வை யிட்டு, சந்தைக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.