கிருஷ்ணகிரி, ஜூலை 31- 1952ல் கே.ஆர்.பி. அணை கட்டுவ தற்காக குடியிருந்தவர்களின் நிலங்க ளையும், விவசாய நிலங்களையும் அரசு கையகப்படுத்தியது. அப்போது இந்த நிலங்களுக்கு மாற்றாக நல்ல இடம் தருகிறோம் எனத் தெரி விக்கப்பட்டது. ஆனால் கூறியபடி இடம் வழங்காமல் மலைக்குள் கொட் டாயூர் என்ற இடத்தில் வழங்கப் பட்டது. இங்கு 300க்கும் மேற்பட்ட வீடுகளில் 1,200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 70 ஆண்டுகளை கடந்த நிலையிலும் அந்த இடத்துக்கு அரசும், பட்டா கொடுக்கவில்லை. 5 ஆண்டுகள் வீடு கட்டி குடி யிருந்தாலே பட்டா வழங்க வேண்டும் என அரசின் சட்டம் இருந்தாலும், அரசே குடியமர்த்தி 70 ஆண்டுகளாக வசிக்கும் இந்த கிராம மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து அசோக்குமார் கூறு கையில், கடந்த மக்களவை தேர்த லின் போது ஊர் மக்கள் பட்டா கேட்டு, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர் தலை புரக்கணிப்பதாக போராட்டம் நடத்தினோம். இங்கு வந்த மாவட்ட தேர்தல் அலுவலர், வட்டாட்சியர் அனைவரும் பட்டா கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். பின்னர், போராட்டத்தை கைவிட்டு வாக்களித்தோம். தேர்தல் முடிந்தும் பட்டா வழங்கவில்லை என்றார். இந்த கிராமத்தில் வசித்தும் வேடி யப்பன், கே.ஆர்.பி, அணை கட்டுவ தற்காக எனது தந்தை சென்னனிடம் 10 ஏக்கர் விவசாய நிலம் எடுக்கப் பட்டது. இப்போது காட்டு விவசா யம் செய்து வருகிறோம். போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்படு கிறோம் என்றார். அரசு குடியமர்த்திய கொட்டா யூர் மக்களுக்கு பட்டா வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது கண்டனத்திற்குரியது என்று விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் தெரி வித்தனர். இந்த கிராம மக்களுக்கு பட்டா வழங்கும் வரை சூளகிரி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மாநில முன்னாள் எம்எல்ஏ பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் ஜெயராமன் ஆகியோர் தெரி வித்தனர்.